கட்சியின் மாநில பேரவைக் குழு தலைவர் பதவிக்கு பிகார் முதல்வர் நிதீஷ் குமார் வேட்புமனு தாக்கல் செய்தார்.
தொடர்ந்து நான்காவது முறையாக நிதீஷ் குமார் போட்டியிடுகிறார். ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மூத்த தலைவர்கள் சாம்ராட் சௌத்ரி மற்றும் பாஜகவைச் சேர்ந்த விஜய்குமார் சின்ஹா மற்றும் ராஜீவ் ரஞ்சன் சிங் ஆகியோர் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
நிதீஷ் குமாருடன் அமைச்சரவை அமைச்சர்களான சந்தோஷ் சுமன் மற்றும் காலித் அன்வர் ஆகியோரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
மாநில சட்டப்பேரவையின் 11 இடங்களுக்கு இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.