திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!

தேர்தல் ஆதாயத்திற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

News image
Updated On :15 மார்ச் 2024, 7:07 am

DIN

பெங்களூரு: 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பெங்களூரு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தேர்தல் ஆதாயத்திற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு சதாசிவ நகர் காவல்நிலையத்தில் பெண் ஒருவர் மோசடி வழக்கு தொடர்பாக உதவி கேட்பதற்காக தனது 17 வயது மகளுடன் சென்றபோது, கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்ததாக புகார் தெரிவித்தார்.

17 வயது சிறுமியின் தாயார் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பெங்களூரு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது தொடர்பாக எடியூரப்பா கூறுகையில், சம்மந்தப்பட்ட சிறுமி, அவரது தாயாருடன் சில நாள்களுக்கு முன் ஏதோ பிரச்னை என்று எனது வீட்டுக்கு வந்தனர். நானும் தனிப்பட்ட முறையில் காவல் ஆணையரை அழைத்து அவர்களுக்கு உதவுமாறு கூறினேன். இந்த நிலையில் சிறுமியின் தாய் எனக்கு எதிராக பேசத் தொடங்கியதால் அதிர்ச்சி அடைந்தேன்.

நடந்த விவகாரம் தொடர்பாக காவல் ஆணையரிடம் தகவல் தெரிவித்த நிலையிலும் என் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமில்லை என்றும், தேர்தல் ஆதாயத்திற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.