மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆராட்டுப்புழா கோயில் திருவிழாவில் யானைகளுக்குள் சண்டை: பலர் காயம்

ஆராட்டுப்புழா கோயில் திருவிழாவில் யானைகளுக்குள் சண்டை, பலர் காயமடைந்தனர்.

News image
Updated On :23 மார்ச் 2024, 6:35 am

இணையதளச் செய்திப் பிரிவு

கேரள மாநிலம் திருசூர் அருகே உள்ள தாரக்கல் கோயில் திருவிழாவின் இறுதி நாளான உபசரம் சொல்லல் நிகழ்ச்சியின்போது, இரண்டு யானைகளுக்குள் சண்டை உருவானதால், திருவிழாவுக்கு வந்திருந்த பலர் காயமடைந்தனர்.

கோயில் யானைகளுக்குள் நடந்த சண்டையின் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது.

கோயில் திருவிழாவின்போது, வெள்ளிக்கிழமை இரவு 10:30 மணியளவில் ஊரக்கத்தின் ‘அம்மாதிருவடி’ திருவுருவத்தை யானை மீது வைத்து ஊர்வலமாகச் சென்றபோது, யானை மிரண்டு மதம்பிடித்தது போல ஆனது. அந்த யானையின் பாகன் ஸ்ரீகுமாரை (53) யானை மூன்று முறை தாக்க முயன்றபோது, நூலிழையில் அவர் உயிர் தப்பினார். இந்த தாக்குதலில் அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

ஆராட்டுப்புழா குலதெய்வத்துக்காகக் கொண்டு வரப்பட்ட புத்துப்பள்ளி அர்ஜூன் யானையையும், மதம்பிடித்த யானை தாக்கியது. முதலில் தற்காத்துக் கொள்ள ஓடிய யானையை, மதம்பிடித்த யானை துரத்தித் தாக்கிய நிலையில், இரண்டு யானைகளுக்குள்ளும் சண்டை மூண்டது. ஒரு யானை மற்றொரு யானையைத் தாக்கத் தொடங்கியதில், திருவிழாவுக்கு வந்திருந்த பலருக்கும் காயமேற்பட்டது. சிலரை யானைகள் தூக்கி தரையில் வீசியதாகவும் கூறப்படுகிறது. சிலர், சம்பவ இடத்திலிருந்து ஓட முயன்றபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

காயமடைந்த அர்ஜூனன் யானை, சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு நிற்காமல் ஓடியது. மதம்பிடித்த யானை, பிறகு யானைகள் படையால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.