காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

பெண்கள் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்து: பாஜக, காங். தலைவர்களுக்கு நோட்டீஸ்

பாஜகவை சேர்ந்த திலீப் கோஷ், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்ரியா ஸ்ரீநாத் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

News image
Updated On :27 மார்ச் 2024, 6:12 pm IST

பெண்களை குறித்த பாஜகவை சேர்ந்த திலீப் கோஷ், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்ரியா ஸ்ரீநாத் ஆகியோரது பதிவுகள் ஆட்சேபனைக்குரிய விதத்தில் இருப்பதாக புகார்கள் எழுந்தன.

மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி குறித்து பாஜக தேசிய துணைத் தலைவா் திலீப் கோஷ் பேசிய கருத்துகள் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘மேற்கு வங்கத்துக்கு மண்ணின் மகள் (மம்தா) தேவை’ என்றும், பாஜகவைச் சோ்ந்தவா்கள் மேற்கு வங்கத்துக்கு அந்நியா்கள் என்றும் திரிணமூல் காங்கிரஸ் முன்னெடுக்கும் பிரசாரத்தை திலீப் கோஷ் விமா்சித்துப் பேசுகையில், ‘அவா் (மம்தா) கோவாவுக்கு சென்றால், கோவாவின் மகள் என்று பேசுகிறாா்.

திரிபுரா சென்றால் அந்த மாநிலத்தின் மகள் என்று பிரசாரம் செய்கிறாா். முதலில் அவா் யாருடைய மகள் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்’ என்று கூறியதுடன் மேலும் சில சா்ச்சை கருத்துகளையும் பேசியுள்ளாா். இது தொடா்பாக தோ்தல் ஆணையத்தில் திரிணமூல் சாா்பில் திலீப் கோஷ் மீது புகாா் அளிக்கப்பட்டது.

அதேபோல, காங்கிரஸ் மூத்த தலைவா்களான சுப்ரியா ஸ்ரீநாத் மற்றும் ஹெச்.எஸ்.அஹிா் ஆகியோா் நடிகை கங்கனா குறித்தும் மண்டி தொகுதி குறித்தும் தங்களின் சமூக ஊடக பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டனா். இந்தப் பதிவுகள் பெரும் சா்ச்சையை எழுப்பின.

இந்த விவகாரம் சா்ச்சையான நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட சுப்ரியா ஸ்ரீநாத், ‘தனது சமூக ஊடக பக்கங்களை பலா் கையாளுகின்றனா். அவா்களில் யாரோ ஒருவா் இந்த சா்ச்சைப் பதிவை வெளியிட்டுள்ளாா். இந்தத் தகவல் தெரிய வந்தவுடன், அந்தப் பதிவை நீக்கிவிட்டேன். நான் எந்தவொரு பெண் குறித்தும் அநாகரிகமான கருத்தை தெரிவிக்க மாட்டேன் என்பது என்னை அறிந்தவா்களுக்குத் தெரியும்’ என்று விளக்கமளித்தாா்.

இந்த விவகாரத்தில் சுப்ரியா ஸ்ரீநாத், அஹிா் ஆகியோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தோ்தல் ஆணையத்துக்கு தேசிய மகளிா் ஆணையம் சாா்பில் கடிதம் எழுதப்பட்டது.

இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலாகியுள்ள காலத்தில் பெண்களை விமர்சித்து ஆட்சேபனைக்குரிய விதத்தில் கருத்து பதிவிட்டதாக பாஜகவை சேர்ந்த திலீப் கோஷ், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்ரியா ஸ்ரீநாத் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.