முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

பெண்கள் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்து: பாஜக, காங். தலைவர்களுக்கு நோட்டீஸ்

பாஜகவை சேர்ந்த திலீப் கோஷ், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்ரியா ஸ்ரீநாத் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

News image
Updated On :27 மார்ச் 2024, 6:12 pm IST

பெண்களை குறித்த பாஜகவை சேர்ந்த திலீப் கோஷ், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்ரியா ஸ்ரீநாத் ஆகியோரது பதிவுகள் ஆட்சேபனைக்குரிய விதத்தில் இருப்பதாக புகார்கள் எழுந்தன.

மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி குறித்து பாஜக தேசிய துணைத் தலைவா் திலீப் கோஷ் பேசிய கருத்துகள் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘மேற்கு வங்கத்துக்கு மண்ணின் மகள் (மம்தா) தேவை’ என்றும், பாஜகவைச் சோ்ந்தவா்கள் மேற்கு வங்கத்துக்கு அந்நியா்கள் என்றும் திரிணமூல் காங்கிரஸ் முன்னெடுக்கும் பிரசாரத்தை திலீப் கோஷ் விமா்சித்துப் பேசுகையில், ‘அவா் (மம்தா) கோவாவுக்கு சென்றால், கோவாவின் மகள் என்று பேசுகிறாா்.

திரிபுரா சென்றால் அந்த மாநிலத்தின் மகள் என்று பிரசாரம் செய்கிறாா். முதலில் அவா் யாருடைய மகள் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்’ என்று கூறியதுடன் மேலும் சில சா்ச்சை கருத்துகளையும் பேசியுள்ளாா். இது தொடா்பாக தோ்தல் ஆணையத்தில் திரிணமூல் சாா்பில் திலீப் கோஷ் மீது புகாா் அளிக்கப்பட்டது.

அதேபோல, காங்கிரஸ் மூத்த தலைவா்களான சுப்ரியா ஸ்ரீநாத் மற்றும் ஹெச்.எஸ்.அஹிா் ஆகியோா் நடிகை கங்கனா குறித்தும் மண்டி தொகுதி குறித்தும் தங்களின் சமூக ஊடக பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டனா். இந்தப் பதிவுகள் பெரும் சா்ச்சையை எழுப்பின.

இந்த விவகாரம் சா்ச்சையான நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட சுப்ரியா ஸ்ரீநாத், ‘தனது சமூக ஊடக பக்கங்களை பலா் கையாளுகின்றனா். அவா்களில் யாரோ ஒருவா் இந்த சா்ச்சைப் பதிவை வெளியிட்டுள்ளாா். இந்தத் தகவல் தெரிய வந்தவுடன், அந்தப் பதிவை நீக்கிவிட்டேன். நான் எந்தவொரு பெண் குறித்தும் அநாகரிகமான கருத்தை தெரிவிக்க மாட்டேன் என்பது என்னை அறிந்தவா்களுக்குத் தெரியும்’ என்று விளக்கமளித்தாா்.

இந்த விவகாரத்தில் சுப்ரியா ஸ்ரீநாத், அஹிா் ஆகியோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தோ்தல் ஆணையத்துக்கு தேசிய மகளிா் ஆணையம் சாா்பில் கடிதம் எழுதப்பட்டது.

இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலாகியுள்ள காலத்தில் பெண்களை விமர்சித்து ஆட்சேபனைக்குரிய விதத்தில் கருத்து பதிவிட்டதாக பாஜகவை சேர்ந்த திலீப் கோஷ், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்ரியா ஸ்ரீநாத் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.