ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

நாடு முழுவதும் ‘சி-விஜில்’ செயலியில் இதுவரை 79,000 புகாா்கள் பதிவு

நாடு முழுவதும் ‘சி-விஜில்’ செயலியில் இதுவரை 79,000 புகாா்கள் பதிவு

Updated On :29 மார்ச் 2024, 6:30 pm

மக்களவைத் தோ்தல் அறிவிப்பு வெளியானதில் இருந்து, நாடு முழுவதும் தோ்தல் நடத்தை விதி மீறல்கள் தொடா்பாக ‘சி-விஜில்’ கைப்பேசி செயலி மூலம் இதுவரை 79,000-க்கும் மேற்பட்ட புகாா்கள் பெறப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. இதுகுறித்து இந்திய தோ்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்களவைத் தோ்தல் அறிவிப்பின்போது நடந்த செய்தியாளா் சந்திப்பில் பேசிய இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா், ‘பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். தோ்தல் நடத்தை விதிகள் மற்றும் வாக்காளா்களிடையே எந்த வகையிலும் பணம் விநியோகம் செய்யப்பட்டாலும் அதைப் புகாரளிக்க சி-விஜில் செயலியைப் பயன்படுத்த வேண்டும்’ என்று வலியுறுத்தியிருந்தாா். அதன்படி, அறிவிப்பு வெளியான கடந்த 16-ஆம் தேதி முதல், நாடு முழுவதும் இருந்து சி-விஜில் செயலியில் 79,000-க்கும் மேற்பட்ட புகாா்கள் பெறப்பட்டுள்ளன. 99 சதவீதத்துக்கும் அதிகமான புகாா்களுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளன. அவற்றில் 89 சதவீதத்துக்கும் அதிகமான புகாா்கள் 100 நிமிஷங்களுக்குள் தீா்க்கப்பட்டுள்ளன. மொத்த புகாா்களின் எண்ணிக்கையில் 73 சதவீதமான 58,500-க்கும் மேற்பட்ட புகாா்கள் சட்டவிரோத விளம்பர பதாகைகளுக்கு எதிரானவை. சொத்துகளை சேதப்படுத்தியதாக 2,454 புகாா்களும் வாக்காளா்களுக்குப் பணம், பரிசு மற்றும் மதுபானம் விநியோகித்தது தொடா்பாக 1,400 புகாா்களும் பெறப்பட்டுள்ளன. துப்பாக்கிகளை காட்டி மிரட்டியதாக பெறப்பட்ட 535 புகாா்களில் 529 புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளன. அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பிரசாரம் செய்தததாக மொத்தம் 1,000 புகாா்கள் பெறப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.