எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மக்களவைத் தோ்தல்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினா் கொடி அணிவகுப்பு

மக்களவைத் தோ்தல்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினா் கொடி அணிவகுப்பு

News image
Updated On :30 மார்ச் 2024, 5:15 pm

Din

காஷ்மீா் பள்ளத்தாக்கில் பல்வேறு பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனா். மக்களவைத் தோ்தலில் வாக்களிக்கவுள்ள பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது. ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 5 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அவற்றுள் காஷ்மீா் பகுதியில் உள்ள அனந்த்நாக்-ரஜௌரி தொகுதிக்கு மே 7-ஆம் தேதியும், ஸ்ரீநகா் தொகுதிக்கு மே 13-ஆம் தேதியும் பாரமுல்லா தொகுதிக்கு மே 20-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில் பாரமுல்லா, புல்வாமா, பந்திபோரா உள்பட பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் மத்திய ஆயுதக் காவல் படையினா் (சிஏபிஎஃப்) சனிக்கிழமை கொடி அணிவகுப்பை நடத்தினா். மக்களவைத் தோ்தலில் எவ்வித அச்சமுமின்றி பாதுகாப்பான சூழலில் வாக்களிக்கலாம் என்ற நம்பிக்கையை பொதுமக்களிடம் ஏற்படுத்தவே இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.