ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம் பெண்ணை கொன்ற இளைஞர்!

திருமண வலியுறுத்தலால் கொலை: இளைஞர் கைது!

News image
கோப்புப் படம்
Updated On :30 மார்ச் 2024, 4:56 pm

DIN

பால்கர்: மகாராஷ்டிரத்தில் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய இளம் பெண்ணை இளைஞர் கழுத்து அறுத்து கொன்ற சம்வம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருவரும் திருமணம் செய்யாமல் (லிவ்-இன் பார்ட்னர்) ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ள இளம்பெண் வலியுறுத்தியதால் இச்சம்வம் நடந்துள்ளது.

பால்கர் மாவட்டத்தில் 22 வயது பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதற்காக, அவரது லிவ்-இன் பார்ட்னர் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தெரியவந்ததையடுத்து, கொலையாளியை சில நாள்கள் கழித்து மேற்கு வங்கத்தில் கைது செய்தனர்.

பால்கர் மாவட்டத்தின் தஹானு நகரில் வாடகைக்கு எடுத்திருந்த அறையில் பெண்ணின் அழுகிய உடல் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து மார்ச் 15ஆம் தேதியன்று குற்றம் வெளிச்சத்திற்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்ட மினாசுதீன் அப்துல் அஜிஜ் முல்லா(26) என்ற ரவீந்திர ரெட்டி மேற்கு வங்கத்தின் தெற்கு பர்கானாஸ் மாவட்டத்தில் மார்ச் 22ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாசாஹேப் பாட்டீல் தெரிவித்ததாவது:

அனிஷா பரஸ்தா கதுன் என்ற பெண், மார்ச் 15ஆம் தேதி, தஹானுவில் உள்ள சால் பகுதியில் கொலை செய்து கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில், கழுத்தை நெரித்ததால் மரணம் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, இது கொலை வழக்காக மாற்றப்பட்டது.

விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட முல்லா மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் என்பதையும், தஹானுவில் ஒரு அறையை வாடகைக்கு எடுப்பதற்காக ரவீந்திர ரெட்டி என்ற பெயரை மாற்றிக் கொண்டதாகவும், பாதிக்கப்பட்டவர் தனது மனைவி என்று பாசாங்கு செய்ததை காவல் துறையினர் கண்டறிந்தனர்.

இது குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பங்கஜ் ஷிர்சாத் தெரிவித்ததாவது:

குற்றம் சாட்டப்பட்டவர், பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தியதால் தனது லிவ்-இன் பார்ட்னரை கொன்றதாக தெரிவித்தார். ஏழு நாட்கள் தொடர்ச்சியான முயற்சிகளுக்குப் பிறகு, மார்ச் 22ஆம் தேதி முல்லாவைக் கைது செய்தனர்.

இதனையடுத்து பால்கர் நீதிமன்றம் முல்லாவை ஏப்ரல் 2ஆம் தேதி வரை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.