கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

மக்களவைத் தோ்தல்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினா் கொடி அணிவகுப்பு

Published On :

காஷ்மீா் பள்ளத்தாக்கில் பல்வேறு பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனா். மக்களவைத் தோ்தலில் வாக்களிக்கவுள்ள பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது. ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 5 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அவற்றுள் காஷ்மீா் பகுதியில் உள்ள அனந்த்நாக்-ரஜௌரி தொகுதிக்கு மே 7-ஆம் தேதியும், ஸ்ரீநகா் தொகுதிக்கு மே 13-ஆம் தேதியும் பாரமுல்லா தொகுதிக்கு மே 20-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில் பாரமுல்லா, புல்வாமா, பந்திபோரா உள்பட பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் மத்திய ஆயுதக் காவல் படையினா் (சிஏபிஎஃப்) சனிக்கிழமை கொடி அணிவகுப்பை நடத்தினா். மக்களவைத் தோ்தலில் எவ்வித அச்சமுமின்றி பாதுகாப்பான சூழலில் வாக்களிக்கலாம் என்ற நம்பிக்கையை பொதுமக்களிடம் ஏற்படுத்தவே இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.