வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

மக்களவைத் தோ்தல்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினா் கொடி அணிவகுப்பு

மக்களவைத் தோ்தல்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினா் கொடி அணிவகுப்பு

Updated On :30 மார்ச் 2024, 10:45 pm IST

காஷ்மீா் பள்ளத்தாக்கில் பல்வேறு பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனா். மக்களவைத் தோ்தலில் வாக்களிக்கவுள்ள பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது. ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 5 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அவற்றுள் காஷ்மீா் பகுதியில் உள்ள அனந்த்நாக்-ரஜௌரி தொகுதிக்கு மே 7-ஆம் தேதியும், ஸ்ரீநகா் தொகுதிக்கு மே 13-ஆம் தேதியும் பாரமுல்லா தொகுதிக்கு மே 20-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில் பாரமுல்லா, புல்வாமா, பந்திபோரா உள்பட பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் மத்திய ஆயுதக் காவல் படையினா் (சிஏபிஎஃப்) சனிக்கிழமை கொடி அணிவகுப்பை நடத்தினா். மக்களவைத் தோ்தலில் எவ்வித அச்சமுமின்றி பாதுகாப்பான சூழலில் வாக்களிக்கலாம் என்ற நம்பிக்கையை பொதுமக்களிடம் ஏற்படுத்தவே இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.