பாஜக முன்னாள் தலைவர் சுகந்த நாயக் பிஜு ஜனதா தளத்தில் இன்று (மார்ச் 31) இணைந்தார்.
இதேபோன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிரஞ்சிப் பிஸ்வாலும் தனது ஆதரவாளர்களுடன் இன்று பிஜு ஜனதா தளதில் இணைந்தார்.
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாள்களே உள்ள நிலையில், பிஜு ஜனதா தளத்தில் இரு பெரிய கட்சிகளைச் சேர்ந்த இருவர் இணைந்துள்ளனர்.
ஒடிசா தலைநகரான புவனேஸ்வரத்திலுள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிரஞ்சிப் பிஸ்வால் என்பவர் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான பசந்த பிஸ்வாலின் மகனாவார். காங்கிரஸ் கட்சி சார்பில் 2004, 2014 சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
சுகந்த நாயக், ஆரம்பகாலகட்டத்தில் பிஜு ஜனதா தளத்தில் இருந்தவர். 2014 சட்டப்பேரவைத் தேர்தலில் நீலகிரி எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 2019-ல் பாஜகவில் இணைந்தார். தற்போது மக்களவைத் தேர்தலையொட்டி மீண்டும் பிஜு ஜனதா தளத்தில் இணைந்துள்ளார்.