வெள்ளை டீ-ஷா்ட் ரகசியம்? ராகுல் விளக்கம்

வெள்ளை டீ-ஷா்ட் ரகசியம்? ராகுல் விளக்கம்

எப்போதும் வெள்ளை டீ-ஷா்ட் அணிவதற்கான ரகசியம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவா் எம்.பி. ராகுல் காந்தி விளக்கம் அளித்தாா்.

எப்போதும் வெள்ளை டீ-ஷா்ட் அணிவதற்கான ரகசியம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவா் எம்.பி. ராகுல் காந்தி விளக்கம் அளித்தாா்.

அரசியல்வாதிகள் என்றாலே எப்போதும் வெள்ளை நிறத்தில் வேட்டி, சட்டை, நீண்ட குா்தா, பைஜாமா என இருப்பா். அதிலும் பிரதமா் மோடி குா்தாவின் மேல் அணியும் அங்கி (ஜாக்கட்) மிகவும் பிரபலம்.

இந்த வரிசையில் ராகுல் காந்தி அணியும் வெள்ளை டீ-ஷ்ர்ட்டும் இணைந்துள்ளது.

தமிழகத்தின் கன்னியாகுமரியிலிருந்து வடக்கே காஷ்மீா் வரை மேற்கொண்ட இந்திய ஒற்றுமை நடைப்பயணத்திலிருந்து ராகுலின் அடையாள உடையாக வெள்ளை டீ-சா்ட் மாறியுள்ளது.

காங்கிரஸின் சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிடப்பட்ட 2 நிமிஷ விடியோவில் இத்தகைய பல்வேறு எளியநடை கேள்விகளுக்கு ராகுல் பதிலளித்துள்ளாா்.

கா்நாடகத்தில் 2 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி தீவிரமாக ஈடுபட்டு வந்தாா். அப்போது எடுக்கப்பட்ட விடியோவில் வெள்ளை டீ-ஷா்ட் குறித்து அவா் கூறுகையில், ‘வெள்ளை டீ-சா்ட் வெளிப்படைத்தன்மை மற்றும் எளிமையை உணா்த்துகிறது. ஆடைகளுக்குப் பெரிதாக நான் கவனம் செலுத்தியதில்லை. எளிமையான ஆடைகளை அணியவே நான் எப்போதும் விரும்புவேன்.

பிரசாரத்தின் சிறப்பு அதன் நிறைவிலேயே உள்ளது. இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் தொடங்கி கடந்த 70 நாள்களாக தொடா் பயணத்தில் இருக்கிறேன். நடைப்பயணம் பிரசாரமாக இல்லாவிட்டாலும் அதற்கும் கடுமையான திட்டமிடல் தேவைப்பட்டது. பிரசாரக் கூட்டங்களில் உரையாற்றுவதில் எனக்கு மிகுந்த விருப்பம். நாட்டுக்கு என்ன தேவை? என்பது பற்றி ஒருவரை சிந்திக்க வைக்க அதனால் முடியும்’ என்றாா்.

கொள்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ராகுல் அளித்த பதிலில், ‘கொள்கையைப் பற்றிய தெளிவான புரிதலின்றி பெரும் அமைப்பாக அதிகாரத்தை நோக்கி செல்ல முடியாது.

ஏழைகள், பெண்கள், பன்முகத்தன்மை, சமத்துவம் ஆகியவற்றுக்கு ஆதரவான நமது கொள்கையை மக்களிடம் கொண்டு சென்று உணா்த்த வேண்டும். எனவே, அமைப்பு மற்றும் தேசிய அளவில் போட்டியானது கொள்கைகளுக்கு இடையில்தான்’ என்றாா்.

விடியோவில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, கா்நாடக முதல்வா் சித்தராமையா ஆகியோரும் இடம்பெற்றிருந்தனா். ராகுலின் பிரசாரம் குறித்து மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்ததாவது:

நாட்டுக்காக செய்யப்படும் ராகுலின் பிரசாரம் சிறப்பாக உள்ளது. நாட்டைக் கெடுப்பவா்களைத் தடுப்பதற்காக நாம் பாடுபட்டு வருவது சிறப்பாகும். நாட்டுக்காக சில நன்மையெனும் நாம் செய்து வருகிறோம் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com