தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

News image
- படம் | பிடிஐ
Updated On :6 மே 2024, 12:52 pm

இணையதளச் செய்திப் பிரிவு

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் வேலைக்குச் செல்வோருக்கு வழங்கப்படும் ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தின் செகான் பகுதியில் இன்று(மே. 6) தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் வேளாண் கடன்களை தள்ளுபடி செய்வது உறுதி. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளபடி, வேலையில்லாமல் அல்லாடும் இளையோருக்கு ஓராண்டுக்கு உத்தரவாதம் அளிக்கும் விதத்தில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலைக்குச் செல்வோருக்கு ரூ. 250 ஆக வழங்கப்பட்டு வரும் ஊதியம், ரூ. 400 ஆக உயர்த்தப்படுவதோடு, ஏழைப் பெண்களின் வங்கிக்கணக்கில் அரசின் மூலம் ரூ. 1 லட்சம் வரவு வைக்கப்படும்” என்று உறுதியளித்துள்ளார் ராகுல் காந்தி.

இந்த தேர்தல் நாட்டின் அரசமைப்பை மட்டுமன்றி, இடஒதுக்கீடு முறை, நாட்டின் பொதுத்துறை, பழங்குடியின மக்களை பாதுகாப்பதற்காக நடைபெறும் யுத்தம். இவற்றையெல்லாம் அதானி உள்ளிட்ட பெரும் பணக்காரர்களுக்கு வழங்கிட மோடி விரும்புகிறார் என்று ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.