மழைச் சாரலிலும் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!
அஸ்ஸாம் மாநிலம் குவாஹத்தியில் வாக்களிக்க சாரல் மழையிலும் நீண்ட வரிசையில் மக்கள் காத்துள்ளனர்.


மக்களவைத் தேர்தலுக்கான 3-ம் கட்ட வாக்குப்பதிவு அஸ்ஸாம் மாநிலத்தின் 4 தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.
காலை முதலே சாரல் மழை பெய்து வரும் நிலையில் குவஹாத்தி, பார்பெட்டா, துப்ரி மற்றும் கோக்ரஜார் தொகுதிகளில் போக்குவரத்து வசதியில்லாத சில பகுதிகளில் வசிக்கும் மக்கள் படகுகளில் சென்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
மேலும், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ ஷர்மா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,
“தற்போது நடைப்பெற்று கொண்டிருக்கும் தேர்தலில் தங்களது வாக்குகளை பயன்படுத்தி ஜனநாயகத்தை மக்கள் வலுப்படுத்த வேண்டும். நமது வானிலையும் ஜனநாயகத் திருவிழாவை கொண்டாட ஏற்றதாக இருக்கிறது,” எனப் பதிவிட்டுள்ளார்.
அஸ்ஸாம் மாநிலத்தில் 41 லட்சத்து 544 ஆண்கள், 40 லட்சத்து 48 ஆயிரத்து 436 பெண்கள் மற்றும் 111 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்பட 81,49,091 பேர் வக்களிக்க தகுதி பெற்றவர்கள்.
அம்மாநிலத்தில் நடைபெறும் 3-ம் கட்ட தேர்தலில் 6 பெண்கள் உள்பட 47 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...