குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் குஜராத்தில் வாக்களித்தார்.
குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி
படம் | பி.டி.ஐ
Published on
Updated on
1 min read

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தலையொட்டி, குஜராத், கா்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 7) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கும் முன்பே பல வாக்குச் சாவடிகளுக்கு வாக்காளர்கள் வரத் தொடங்கிவிட்டதையும் காண முடிந்தது. வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில், வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

தனது சொந்த மாநிலமான குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி.

குஜராத் தலைநகர் காந்திநகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் இருந்து காலை புறப்பட்ட மோடி, அகமதாபாத்தில் உள்ள நிஷான் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் வாக்கு செலுத்தினார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அதே பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் வாக்கு செலுத்தினார்.

படம் | ஏ.என்.ஐ

குஜராத்தில் 25, கா்நாடகத்தில் 14 (இங்கு இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு), மகாராஷ்டிரத்தில் 11, உத்தர பிரதேசத்தில் 10, மத்திய பிரதேசத்தில் 9, சத்தீஸ்கரில் 7, பிகாரில் 5, அஸ்ஸாம், மேற்கு வங்கத்தில் தலா 4, கோவாவில் 2, தாத்ரா-நகா் ஹவேலி மற்றும் டாமன்-டையூ யூனியன் பிரதேசத்தில் 2 தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com