மும்பையில் ஷவர்மா சாப்பிட்ட 19 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கடையில் பணிபுரிந்த இருவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வடகிழக்கு மும்பையிலுள்ள ட்ரோம்பே பகுதியின் சாலையோரக் கடையில் 19 வயதான பிரதமேஷ் போக்சே என்பவர் மே 3ஆம் தேதி ஷவர்மா வாங்கியுள்ளார். இரவு உணவாக அதனை உண்ட அவருக்கு மே 4ஆம் தேதி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அவர் சென்றுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
எனினும் வயிற்று வலி சரியாகாததால் நகரப் பகுதியிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அவரின் குடும்பத்திரன் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். தொடர்ந்து உடல்நலக் குறைவுடன் காணப்பட்டதால் மீண்டும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்து வந்த நிலையில், திடீரென உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் ஷவர்மா கடையில் பணிபுரிந்த இருவரை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மூளையைத் தின்னும் அமீபா: கேரளத்தில் இளம்பெண் பலி!

பூச்சிக்கொல்லி சாப்பிட்ட இளைஞா் உயிரிழப்பு

பானி பூரி சாப்பிட்ட 6 வயது குழந்தை பலி! 43 பேருக்கு உடல்நலம் பாதிப்பு!
வெளிப்புற தில்லியில் பெண் சடலம் மீட்பு: மூவா் கைது
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு



