காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மும்பை விபத்து: விளம்பர நிறுவனத்தின் இயக்குநர் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்!

மும்பை விபத்தில் குறிப்பிட்ட விளம்பர நிறுவன இயக்குநர் மீது பாலியல் வழக்கு நிலுவை

News image
பெட்ரோல் நிலையத்தின் மீது விழுந்த விளம்பர பலகை- பிடிஐ
Updated On :14 மே 2024, 1:07 pm

DIN

14 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான மும்பை காட்கோபர் விளம்பரப் பலகை விபத்தில் தேடப்பட்டு வரும் விளம்பர நிறுவனத்தின் இயக்குநர் பாவேஷ் பிண்டே மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றில் பாலியல் வழக்கும் அடக்கம்.

தலைமறைவாக உள்ள பாவேஷின் அலைபேசி அணைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈகோ விளம்பர நிறுவனத்தின் இயக்குநர் பாவேஷ் பிண்டே, 2009 சட்டப்பேரவை தேர்தலில் முலுந்த் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டவர் என்றும் அப்போது அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் 23 வழக்குகள் மும்பை மாநகராட்சி சட்டவிதிகள் மீறல் மற்றும் பண மோசடி வழக்குகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேடப்படும் பாவேஷ் பிண்டே

தேடப்படும் பாவேஷ் பிண்டே

இந்தாண்டு ஜனவரியில் அவர் மீது முலுந்த் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றும் பதியப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே மற்றும் மும்பை மாநகர நிர்வாகத்திடம் இருந்து ஏராளமான ஒப்பந்தங்களை இவர் பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இரு நிர்வாகங்களின் விதிகளையும் பல முறை இவர் மீறியுள்ளார். அவரது நிறுவனம், சட்டத்திற்கு புறம்பாக மரங்களை வெட்டிய குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகியுள்ளது.

காட்கோபரில் நிறுவப்பட்ட விளம்பர பலகை 120 அடிக்கு 120 அடி உயரமும் அகலமும் கொண்டது. மும்பை மாநகரட்சியின் அனுமதிக்கப்பட்ட விளம்பர பலகை அளவு என்பது 40 அடிக்கு 40 அடி மட்டுமே.

இது தொடர்பாக வழக்குப் பதியப்பட்டுள்ளதாகவும் மும்பையில் சட்டத்திற்கு புறம்பாக நிறுவப்பட்ட விளம்பர பலகைகள் மீது நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளதாகவும் மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.