மணீஷ் சிசோடியாவுக்கு மே 31 வரை காவல் நீட்டிப்பு!

இன்னும் சற்றுநேரத்தில் இடைக்கால ஜாமீன் கோரிய மணீஷ் சிசோடியா மனு மீது தில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.
மணீஷ் சிசோடியா (கோப்புப்படம்)
மணீஷ் சிசோடியா (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை மே 31 வரை நீட்டித்து தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இதே வழக்கில் தில்லி உயர்நீதிமன்றமும் மணீஷ் சிசோடியாவின் காவலை மே 30 வரை நீட்டித்து கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டிருந்தது.

கலால் கொள்கை வழக்கில் தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை(சிபிஐ) கடந்தாண்டு பிப். 26 ஆம் தேதி கைது செய்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையும் தொடர்ந்து சிசோடியாவிடம் விசாரித்து வருகின்றது.

மணீஷ் சிசோடியா (கோப்புப்படம்)
போதையில் கார் ஓட்டி இருவர் பலியாக காரணமான சிறுவன்: நடந்தது என்ன?

மக்களவைத் தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில் ஆம் ஆத்மி கட்சிக்கு பிரசாரம் மேற்கொள்வதற்காக சிசோடியா இடைக்கால ஜாமீன் கோரிய மனு விசாரணை நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தில்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com