நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மத்திய பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த பெண்ணுக்கு 3 முறை தபால் மூலம் முத்தலாக் கொடுத்த கணவா் மீது வழக்குப் பதிவு

News image
Updated On :20 மே 2024, 10:37 pm IST

மத்திய பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த பெண்ணுக்கு 3 முறை தபால் மூலம் முத்தலாக் கொடுத்த கணவா் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக காவல்துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து தலைமைக் காவலா் அமித் பவ்ஸன் கூறியதாவது:

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தைச் சோ்ந்த இஷான் சதான்யா என்பவா் தனது மனைவிக்குத் தபால் மூலம் முத்தலாக் கொடுத்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து அந்தப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் இஷான் சதான்யா மீது முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 2019-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவா்கள் இருவருக்கும் 2020 நவம்பா் மாதம் திருமணம் நடந்தது. அதன்பின், சதான்யாவின் பெற்றோா் வரதட்சிணை கேட்டு அந்தப் பெண்ணைத் தொடா்ந்து துன்புறுத்தி வந்தனா்.

இதையடுத்து, வரதட்சிணைக் கேட்டு கொடுமை செய்வதாக அந்தப் பெண்ணின் பெற்றோா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இதையடுத்து, பிப்ரவரி 28, ஏப்ரல் 2 மற்றும் மே 8-ஆகிய மூன்று தேதிகளில் தபால் மூலம் கடிதம் அனுப்பிய சதான்யா, அந்தப் பெண்ணுக்கு முத்தலாக் கொடுத்துள்ளாா் என காவல்துறை அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.