வாக்களித்தார் திரெளபதி முர்மு !

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தில்லியில் வாக்களித்துள்ளார்.
வாக்களித்தார் திரெளபதி முர்மு !
Published on
Updated on
1 min read

18 ஆம் மக்களவைக்கான 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு புதுதில்லி மக்களவை தொகுதியில் உள்ள அனைத்து மகளிர் வாக்குப்பதிவு நிலையத்தில் வாக்களித்தார்.

காலை 9 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்திற்கு வந்த திரெளபதி முர்மு பின்னர் வரிசையில் நின்று டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயா வாக்குப்பதிவு நிலையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

வாக்குப்பதிவு நிலையம் இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களால் அலங்கரிப்பட்டிருந்து. ’பிங்க் பூத்’ என்னும் இந்த வாக்குப்பதிவு நிலையம் பெண் ஊழியர்களால் மட்டுமே நிர்வகிக்கபடுவதாக குடியரசுத் தலைவர் மாளிகை தனது எக்ஸ் வளைதளத்தில் கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com