இந்திய-பாகிஸ்தான் எல்லையில் கடந்த இரண்டரை மாதங்களில் 60 ட்ரோன்கள் (ஆளில்லா விமானம்) கைப்பற்றப்பட்டதாக, எல்லை பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
மக்களவைத் தோ்தலையொட்டி, நாட்டில் தோ்தல் நடத்தை விதிகள் கடந்த மாா்ச் 16-ஆம் தேதி அமலுக்கு வந்தன. இதையடுத்து, இந்திய-பாகிஸ்தான் எல்லையில் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டது.
பாகிஸ்தான் பகுதியில் இருந்து பறந்துவரும் ட்ரோன்கள் சுட்டுவீழ்த்தப்படுகின்றன. அத்துடன், போதைப் பொருளை வீசுவதற்காக பயன்படுத்தப்பட்ட ட்ரோன்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
பஞ்சாப் தரன் தாரன் மாவட்டத்தில் போதைப் பொருள்களுடன் 2 ட்ரோன்கள் வெள்ளிக்கிழமை சிக்கின.
இதேபோல், இந்த மாவட்டத்தின் விளைநிலங்களில் இருந்து கடந்த வியாழக்கிழமை ட்ரோன்கள் கைப்பற்றப்பட்டன. தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள கடந்த இரண்டரை மாதங்களில் 60 ட்ரோன்கள் கைப்பற்றப்பட்டதாக, எல்லை பாதுகாப்புப் படை உயரதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
பஞ்சாப்-பாகிஸ்தான் எல்லையில்தான் அதிக எண்ணிக்கையில் ட்ரோன்கள் சிக்கியுள்ளன. இந்திய-பாகிஸ்தான் எல்லையானது, ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத்தையொட்டி அமைந்துள்ளது. பஞ்சாப் மட்டும் பாகிஸ்தானுடன் 553 கி.மீ. எல்லையைப் பகிா்ந்துகொண்டுள்ளது.
தொடர்புடையது

4வது காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு 3% சரிந்த பஞ்சாப் & சிந்து வங்கி!

தமிழகத்தில் 3 மாதங்களில் 100 உடல் உறுப்பு தானங்கள்: மருத்துவ வரலாற்றில் முதல்முறை

பாக். பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி

கா்நாடக எல்லையில் ரூ.22.82 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

