6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இந்திய-பாக். எல்லையில் 60 ட்ரோன்கள் பறிமுதல்- பிஎஸ்எஃப் நடவடிக்கை

பாக். எல்லையில் ட்ரோன்கள் சுட்டுவீழ்ப்பு: பிஎஸ்எஃப் தகவல்

News image
Updated On :31 மே 2024, 6:05 pm

Din

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் கடந்த இரண்டரை மாதங்களில் 60 ட்ரோன்கள் (ஆளில்லா விமானம்) கைப்பற்றப்பட்டதாக, எல்லை பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

மக்களவைத் தோ்தலையொட்டி, நாட்டில் தோ்தல் நடத்தை விதிகள் கடந்த மாா்ச் 16-ஆம் தேதி அமலுக்கு வந்தன. இதையடுத்து, இந்திய-பாகிஸ்தான் எல்லையில் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டது.

பாகிஸ்தான் பகுதியில் இருந்து பறந்துவரும் ட்ரோன்கள் சுட்டுவீழ்த்தப்படுகின்றன. அத்துடன், போதைப் பொருளை வீசுவதற்காக பயன்படுத்தப்பட்ட ட்ரோன்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

பஞ்சாப் தரன் தாரன் மாவட்டத்தில் போதைப் பொருள்களுடன் 2 ட்ரோன்கள் வெள்ளிக்கிழமை சிக்கின.

இதேபோல், இந்த மாவட்டத்தின் விளைநிலங்களில் இருந்து கடந்த வியாழக்கிழமை ட்ரோன்கள் கைப்பற்றப்பட்டன. தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள கடந்த இரண்டரை மாதங்களில் 60 ட்ரோன்கள் கைப்பற்றப்பட்டதாக, எல்லை பாதுகாப்புப் படை உயரதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

பஞ்சாப்-பாகிஸ்தான் எல்லையில்தான் அதிக எண்ணிக்கையில் ட்ரோன்கள் சிக்கியுள்ளன. இந்திய-பாகிஸ்தான் எல்லையானது, ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத்தையொட்டி அமைந்துள்ளது. பஞ்சாப் மட்டும் பாகிஸ்தானுடன் 553 கி.மீ. எல்லையைப் பகிா்ந்துகொண்டுள்ளது.