மத்திய வக்ஃப் கவுன்சிலில் கட்டாயமாக இரு முஸ்லிம் அல்லாத உறுப்பினர்கள் சேர்ப்பதற்கு முன்மொழியப்பட்டது குறித்து மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாகப் பத்திரிகையாளர்களுடன் பேசிய எம்பி அசாதுதீன் ஓவைசி, ”முஸ்லிம்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் அறங்காவலர்களாக இருக்கமுடியாது என்றால், வக்ஃப் வாரியத்தில் எப்படி முஸ்லிம் அல்லாதவர்கள் உறுப்பினராக இருக்கமுடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் உள்ள 24 உறுப்பினர்களில் ஹிந்து அல்லாதாவர் ஒருவர் கூட இல்லை. தேவஸ்தானத்தின் புதிய தலைவர் அங்கு பணியாற்றுபவர்கள் ஹிந்துவாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. ஆனால், மத்திய வக்ஃப் கவுன்சிலில் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று மோடியின் அரசு வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவில் கூறியிருப்பதில் எங்களுக்கு ஆட்சேபணை உள்ளது.
வக்ஃப் மசோதாவில் இதனை ஏன் கொண்டு வருகிறீர்கள். திருப்பதி தேவஸ்தானம் எப்படி ஹிந்துக்களுக்கானதோ, அதுபோல வக்ஃப் வாரியம் முஸ்லிம்களுக்கானது. இதில், சமத்துவம் இருக்கவேண்டும்.” என்று பேசினார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத் தலைவர் பி.ஆர்.நாயுடு கடந்த வியாழனன்று (அக். 31) திருப்பதியில் பணிபுரியும் பிற மத ஊழியர்களை வேறு துறைகளுக்கு மாற்றலாமா அல்லது விருப்ப ஓய்வு வழங்கலாமா என்பது குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து ஓவைசி இவ்வாறு பேசியுள்ளார்.
வக்ஃப் வாரிய சொத்துக்களை ஒழுங்குபடுத்த 1995 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வக்ஃப் சட்டம் தவறான நிர்வாகம், ஊழல் மற்றும் ஆக்கிரமிப்புகள் போன்ற குற்றச்சாட்டுகளை நீண்ட காலமாக எதிர்கொண்டு வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட வக்ஃப் சட்டதிருத்த மசோதா 2024-ல் சீர்திருத்தங்கள், டிஜிட்டல் மயமாக்கல், கடுமையான நிதிதொடர்பான ஆய்வுகள், வெளிப்படைத்தன்மை மற்றும் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கான சட்ட வழிமுறைகளை கொண்டு வர முயல்வதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க | அமித் ஷா மீதான குற்றச்சாட்டு அபத்தமானது: கனடாவுக்கு இந்தியா கண்டனம்
வக்ஃப் சட்டத்திருத்த மசோதா 2024 தொடர்பான கூட்டுக் குழு, சட்டத்திருத்தம் குறித்து ஆய்வு செய்ய 5 இந்திய நகரங்களுக்குச் செல்ல இருப்பதாக மக்களவையில் அக். 31 அன்று அறிவிக்கப்பட்டது.
இந்தக் கூட்டுக் குழுவினர் கவுகாத்தி, புவனேஸ்வர், கொல்கத்தா, பாட்னா, லக்னௌ ஆகிய நகரங்களுக்கு நவம்பர் 9 முதல் 14 வரை ஆய்வுப் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கு சென்டாக்கில் விண்ணப்பங்கள் வரவேற்பு: தகவல் கையேட்டை வெளியிட்டாா் முதல்வா் ரங்கசாமி

வழக்குரைஞரான பேரறிவாளன்! தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு!
முஸ்லிம் வாக்குகளைப் பிரிக்க பாஜகவிடம் ரூ. 1,000 கோடி பெற்ற ஹுமாயூன் கபீர்? மே. வங்கத்தில் கூட்டணியை முறித்தார் ஓவைசி!

முஸ்லிம் சமூகத்திற்கு திரிணமூல் காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை: ஓவைசி
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

