தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில் மும்பை கனமழை! முதல் முறை.. டப்பாவாலா சேவை ரத்து!த்ரிஷா அம்மாவுக்கு வந்த சினிமா வாய்ப்பு! இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்களா?கரூர் பலி! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான மனு நாளை விசாரணை!
/

வருமான வரி சோதனைக்கு பயந்து பணிப்பெண்ணிடம் பணத்தைப் பறிகொடுத்த முதலாளி!

போலி வருமான வரி சோதனை திட்டம் தீட்டி பணத்தைக் கொள்ளையடித்த பணிப்பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.

News image

கோப்புப் படம்

Updated On :2 நவம்பர் 2024, 3:31 pm IST

முதலாளியை ஏமாற்றி பணத்தை கொள்ளையடித்து சென்ற பணிப்பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கர்நாடகத்தில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் ஜூலியட் வீட்டில் சுனிதா என்பவர் கடந்த 4 மாதங்களாக பணிபுரிந்து வந்துள்ளார். சுனிதா வீட்டு வேலைபார்க்கும் பெண் என்றாலும், அவரிடம் தனது குடும்பப் பிரச்னைகள் குறித்தும் ஜூலியட் அவ்வப்போது விவாதித்து வந்துள்ளார். மேலும், கணவரைப் பிரிந்து ஜூலியட் தனியாக வசித்து வந்த நிலையில், கணவருக்கு தெரியாமல் அவருடைய பணத்தையும் நகைகளையும் தன்னிடமே வைத்திருந்தார்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமையில் ஓர் ஸ்டானி என்ற ஆணுடன் வந்த சுனிதா, ஸ்டானியை வருமான வரித் துறை அதிகாரி என்று கூறி நம்ப வைத்துள்ளார். வீட்டைச் சோதனை செய்ய அவர் வந்திருப்பதாகக் கூறி, ஜூலியட் வைத்திருந்த நகைகள், பணத்தினைச் சோதனை செய்துள்ளனர்.

அந்த சமயத்தில் அதிகாரி சென்றவுடன் திருப்பி தருவதாகக் கூறி, ஜூலியட்டின் ரூ. 7.5 லட்சம் ரொக்கம், ரூ. 1 லட்சம் மதிப்பிலான வைர நகைகளை வாங்கி வைத்துக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, போலி அதிகாரியான ஸ்டானியுடன் சேர்ந்து, சுனிதாவும் வீட்டைவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இதனையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜூலியட், அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.