ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வங்கதேச ஊடுருவலை ஆதரிக்கிறார் ஜார்க்கண்ட் முதல்வர்: அமித் ஷா

வங்கதேசத்தினரின் ஊடுருவலை ஹேமந்த் சோரன் ஆதரிப்பதாக அமித் ஷா குற்றச்சாட்டு.

News image
மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா- PTI
Updated On :3 நவம்பர் 2024, 4:18 pm

DIN

வங்கதேசத்தினரின் ஊடுருவலை ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆதரிப்பதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம் காட்ஷிலா பகுதியில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா (நவ. 3) கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது, ''ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரும் முதல்வருமான ஹேமந்த் சோரன் மாநில மக்களுக்கு துரோகமிழைக்கிறார். வங்கதேசத்தினரின் ஊடுருவலை ஆதரிப்பதன்மூலம் ஜார்க்கண்ட் சகோதர, சகோதரிகளுக்கு அநீதி இழைக்கிறார். மாநில மக்களின் நலன் காக்க சோரன் அரசு தவறிவிட்டது.

பாஜக ஆட்சி அமைத்தால், நிலங்கள் பழங்குடி மக்களிடம் சேரும் வகையில் சட்டத்தை இயற்றுவோம். ஊடுருபவர்கள் நிலங்களை உரிமை கொண்டாட முடியாத வகையில் சட்டத்தை வலுப்படுத்துவோம்.

ஜார்க்கண்ட்டில் ஒரே பொது சிவில் சட்டம் அறிமுகப்படுத்தப்படும். ஆனால், பழங்குடி சமூக மக்கள் அதன் வரம்பிற்குட்படாமல் இருக்க வழிவகை செய்யப்படும். மாநிலத்தில் யுசிசி அமல்படுத்தப்பட்டால் பழங்குடியின மக்களின் கலை, கலாசாரம் சீரழிந்து விடும் என வதந்தி பரப்பப்படுகிறது. அது உண்மையல்ல'' என அமித் ஷா பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.