கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

வங்கதேச ஊடுருவலை ஆதரிக்கிறார் ஜார்க்கண்ட் முதல்வர்: அமித் ஷா

வங்கதேசத்தினரின் ஊடுருவலை ஹேமந்த் சோரன் ஆதரிப்பதாக அமித் ஷா குற்றச்சாட்டு.

மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா - PTI

Published On :3 நவம்பர் 2024, 9:48 pm IST

வங்கதேசத்தினரின் ஊடுருவலை ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆதரிப்பதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம் காட்ஷிலா பகுதியில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா (நவ. 3) கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது, ''ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரும் முதல்வருமான ஹேமந்த் சோரன் மாநில மக்களுக்கு துரோகமிழைக்கிறார். வங்கதேசத்தினரின் ஊடுருவலை ஆதரிப்பதன்மூலம் ஜார்க்கண்ட் சகோதர, சகோதரிகளுக்கு அநீதி இழைக்கிறார். மாநில மக்களின் நலன் காக்க சோரன் அரசு தவறிவிட்டது.

பாஜக ஆட்சி அமைத்தால், நிலங்கள் பழங்குடி மக்களிடம் சேரும் வகையில் சட்டத்தை இயற்றுவோம். ஊடுருபவர்கள் நிலங்களை உரிமை கொண்டாட முடியாத வகையில் சட்டத்தை வலுப்படுத்துவோம்.

ஜார்க்கண்ட்டில் ஒரே பொது சிவில் சட்டம் அறிமுகப்படுத்தப்படும். ஆனால், பழங்குடி சமூக மக்கள் அதன் வரம்பிற்குட்படாமல் இருக்க வழிவகை செய்யப்படும். மாநிலத்தில் யுசிசி அமல்படுத்தப்பட்டால் பழங்குடியின மக்களின் கலை, கலாசாரம் சீரழிந்து விடும் என வதந்தி பரப்பப்படுகிறது. அது உண்மையல்ல'' என அமித் ஷா பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.