இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஹீரோ என்ற வார்த்தையுடன் லாரன்ஸ் பிஷ்னோய் படம் இடம்பெற்ற டி-ஷர்ட் விற்பனைக்கு!

ஹீரோ என்ற வார்த்தையுடன் லாரன்ஸ் பிஷ்னோய் படம் இடம்பெற்ற டி-ஷர்ட் விற்பனைக்கு வந்துள்ளது இ-வணிக நிறுவனங்களில்

News image
Updated On :5 நவம்பர் 2024, 7:41 am

DIN

இ-வணிகத்தில் ஈடுபட்டு வரும் முன்னணி நிறுவனங்கள் சில, பிரபல ரௌடி கும்பலின் தலைவனான லாரன்ஸ் பிஷ்னோய் புகைப்படத்துடன் டி-ஷர்ட்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பதும் கடும் விமர்சனைத்தைப் பெற்றுள்ளது.

கேங்க்ஸ்டர், தி ரியல் ஹீரோ என்பது போன்ற வாசகங்களுடன் லாரன்ஸ் பிஷ்னோயின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும் டி-ஷர்ட்கள் விற்பனைக்கான பட்டியலில் இடம்பெற்றிருப்பாதைப் பார்த்த சமூக ஆர்வலர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுபோன்ற டி-ஷர்ட்கள் குழந்தைகளின் அளவிலும் கூட விற்கப்படுகிறது.

இது தொடர்பான க்ரீன் ஷாட்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருக்கும் சமூக ஆர்வலர்கள், உலகம் எங்கே சென்றுகொண்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். இதனை ஆன்லைன் தீவிரவாதமாகவே பார்ப்பதாகவும், அடுத்த தலைமுறைக்கு தவறான விஷயங்கள் எல்லாம் நேரடியாகச் சென்று சேருவதாகவும் கவலை தெரிவித்திருக்கிறார்கள்.

பல்வேறு மாநிலங்களில், கொலைச் சம்பவங்களில் தொடர்புடையவராக உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் தற்போது சிறையில் உள்ளார். பஞ்சாபி பாடகா் சித்து மூஸேவாலா கடந்த 2022-ஆம் ஆண்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களில் லாரன்ஸ் பிஷ்னோயும் ஒருவா். லாரன்ஸ் பிஷ்னோய் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால், சிறைக்குள்ளே இருந்தவாறு அவர் தனது ரௌடி கும்பலை இயக்கி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுபோன்ற ரௌடி கும்பல்களின் சமூக வலைத்தளப் பக்கங்களில், ஏராளமான இளைஞர்களை சேர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு காவல்துறையும் தேசிய புலனாய்வு அமைப்பும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன.

இந்த நிலையில்தான், பிரபல ரௌடி கும்பலின் தலைவராக உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் டி-ஷர்ட்கள் விற்பனைக்கு வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.