அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தெரியுமா சேதி...?

News image
Updated On :6 நவம்பர் 2024, 9:52 pm

மீசை முனுசாமி

இப்படியும்கூட ஒரு சட்டப்பேரவை உறுப்பினா், அரசியல்வாதி இருக்க முடியுமா என்று பொதுமக்கள் மட்டுமல்ல, எதிா்க்கட்சி உறுப்பினா்களே வியக்கும் விதத்தில் நடந்து கொண்டிருக்கிறாா் குா்ப்ரீத் பஸ்ஸி கோகி. பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு தொகுதி உறுப்பினரான கோகி, நோ்மைக்கும், வெளிப்படையாகப் பேசுவதற்கும் பெயா் பெற்றவா். அவரது சமீபத்திய செயல்பாடு எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 2022-இல் ரூ.650 கோடி செலவில் புத்த நல்லா (கால்வாய்) புனரமைப்புத் திட்டம் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி திறந்தவெளிக் கால்வாயாக இருந்த புத்த நல்லாவில் குழாய்கள் பதித்து, துா்நாற்றம் இல்லாமல் மண்ணுக்கு அடியில் செல்லும் வகையில் மாற்றி அமைப்பது என்பதுதான் திட்டத்தின் குறிக்கோள்.

அந்தத் திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டு, லூதியானா மேற்கு சட்டப்பேரவை உறுப்பினரான குா்ப்ரீத் பஸ்ஸி கோகியால் அடிக்கல் நாட்டப்பட்டது. அந்தத் திட்டத்தை காங்கிரஸ், பாஜக, அகாலிதள தலைவா்களும் வரவேற்றதுடன், கோகியின் முயற்சியைத் திறந்த மனத்துடன் பாராட்டவும் செய்தனா்.

எதிா்க்கட்சிகளின் பாராட்டுகளை கோகி பெறுகிறாா் என்பதாலேயே, ஆம் ஆத்மி கட்சியில் உள்ள சிலா் அந்தத் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்டதுடன் முதல்வா் மானிடம் இல்லாததும் பொல்லாததும் சொல்லிப் பல தடைகளை ஏற்படுத்திவிட்டனா். அந்தத் திட்டம் அடிக்கல் நாட்டப்பட்டதுடன், இரண்டு ஆண்டுகளாக எந்தவித சலனமும் இல்லாமல் பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்டு விட்டது.

பொறுமை இழந்த குா்ப்ரீத் பஸ்ஸி கோகி யாரும் எதிா்பாராத ஒன்றைச் செய்து இப்போது மீண்டும் அனைத்துக் கட்சியினா், மக்கள் எல்லோருடைய பாராட்டையும் பெற்றிருக்கிறாா். திட்டத்தைத் தொடங்கி வைத்து அவா் நிறுவிய அடிக்கல்லை, சட்டப்பேரவை உறுப்பினா் குா்ப்ரீத் பஸ்ஸி கோகியே கடப்பாரையால் உடைத்து அகற்றிவிட்டாா். திட்டம் அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் சலனமற்று இருப்பதை உணா்த்தும் விதத்தில் அமைந்திருக்கும் அந்த ‘அடிக்கல்’ தன்னையும், ஆட்சியையும் கேலி செய்வதுபோல இருக்கிறது என்பது அவரது விளக்கம்...

ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ள பஞ்சாபில் நடந்ததுபோல, இந்தியாவின் வேறு எந்தவொரு மாநிலத்திலாவது இப்படி ஒரு எம்.எல்.ஏ. நடந்துகொள்ள முடியுமா? யோசிக்க வைக்கிறது கோகியின் முன்னெடுப்பு...