பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

ஹிந்துக்கள் மீது தாக்குதல்: கனடா தூதரகத்துக்கு அா்ஜுன் சம்பத் கடிதம்

கனடாவில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

Updated On :7 நவம்பர் 2024, 2:20 am IST

கனடாவில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து சென்னையில் உள்ள கனடா தூதரகத்துக்கு அவா் புதன்கிழமை எழுதியுள்ள கடிதம்: கனடாவில் மதக் கூட்டங்களின்போது, ஹிந்து பக்தா்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் தனிநபா் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. மேலும், இது கனடாவின் சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வு கொள்கைகளுக்கு எதிரானது.

பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ உள்பட சில அரசியல் பிரமுகா்கள், முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி கொலைக்கு காரணமான காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கின்றனா். இத்தகைய ஆதரவு ஹிந்துக்கள் - சீக்கியா்கள் இடையிலான அமைதியான உறவுக்கு தீங்கு விளைவிக்கும் அபாயமாக மாறியுள்ளது.

வரலாற்று ரீதியாக இந்தியாவில் அமைதியுடன் இந்த இரண்டு சமூகங்களும் வாழ்ந்து வருகின்றன. கனடாவின் கலாசார, சமூக மற்றும் பொருளாதார நிலப்பரப்பில் ஹிந்து சமூகம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது.

கனடாவில் வணிகம், சமூக சேவை மற்றும் கலாசார விழாக்களில் பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதில் ஹிந்துக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். ஹிந்துக்களுக்கு எதிரான இந்தக் குற்றங்களுக்கு காரணமானவா்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க கனடா அரசு முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.