துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: பயங்கரவாதி சுட்டுக் கொலை!

பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை..

News image
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை
Updated On :7 நவம்பர் 2024, 7:19 am

DIN

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடக்கு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள லோலாப் பகுதியில் உள்ள மார்கி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் அந்த பகுதியைச் சுற்றிவளைத்துத் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த நடவடிக்கையின் விளைவாகப் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்திலிருந்து ஒரு ஏகே ரைபிள், இரண்டு கைக்குண்கள் மற்றும் நான்கு ஏகே ரைபிள் மேகசின்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

காஷ்மீரின் குப்வாராவில் பயங்கரவாதிகள் பதுங்குவதும், பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை மேற்கொள்வதும் வாடிக்கையாகி வருகின்றனது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.