மகாராஷ்டிர மக்கள் நல்லதொரு மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று தேசியவாத கங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்தார்.
நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கோரிக்கையையும் சரத் பவார் ஆதரித்தார்.
நவம்பர் 20-ஆம் தேதி நடைபெறவுள்ள மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக நாக்பூர் விமான நிலையத்தில் பொதுக்கூட்டங்களுக்கு முன்னதாக முன்னாள் மத்திய அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசினார்.
மகாராஷ்டிர மக்கள் மாற்றத்தை விரும்புவதாக நாங்கள் உணர்கிறோம். அவர்களுக்கு நம்பிக்கையை அளிக்க நாங்கள் பணியாற்ற வேண்டும். அதை நோக்கிச் செயல்பட்டு, நானும் எனது கட்சியில் உள்ளவர்களும் இன்று முதல் மகாராஷ்டிரம் முழுவதும் உள்ள மக்களைச் சென்றடைகிறோம்.
முன்னதாக ராகுல் நாக்பூருக்குச் சென்றபோது ஜாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என்று கூறினார். இதுதொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த பவார்.. எனது கட்சியின் நிலைப்பாட்டை நான் கூறுவேன். கடந்த 3 ஆண்டுகளாக ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி வருகிறோம்.
நாட்டின் உண்மைகளைக் கொண்டுவரும் வகையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். முதற்கட்டமாக இடஒதுக்கீடு வரம்பை அதிகரிப்பது குறித்து முடிவை எளிதாக்க ஜாதிவாரி கணக்கெடுப்பு உதவும். மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்தபிறகு தெளிவு ஏற்படும். மேலும் ராகுல் சொல்வது நடந்தால், இதுஒதுக்கீடு சதவீதமும் அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாமகவினா் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

ஜாதிவாரி கணக்கெடுப்பு; பாமக வரவேற்பு

எல்பிஜி சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: அரசுக்கு சரத் பவார் எச்சரிக்கை!

ஜாதிவாரி கணக்கெடுப்பு எங்கள் நிலைப்பாடு: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



