காங்கிரஸ் கட்சிக்கு திமுக கண்டனம்!பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்திமுக எம்எல்ஏக்களுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!கேரளத்தின் புதிய முதல்வர் யார்? காங்கிரஸ் தலைமைக்கு அதிகாரம் அளிப்பு!ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்! தொங்கு சட்டப்பேரவை என்பது என்ன? இதற்கு முன் தமிழகத்தில் நேரிட்டிருக்கிறதா?ராயபுரத்தில் வென்ற தவெகவின் ஆட்டோ இல்லாத ஆட்டோ ஓட்டுநர்!திமுக - அதிமுக கூட்டணி என்பது பரவிய வதந்தியா? பரப்பப்பட்டதா?ஆட்சியமைக்க அழைக்கப்படுவாரா விஜய்? ஆளுநர் மாளிகை விளக்கம்தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும் : கபில் சிபல்அதிமுக எம்எல்ஏக்களைச் சந்திக்க புதுவை செல்கிறார் இபிஎஸ்! ஆளுநரிடம் அழைப்பில்லை! உச்சநீதிமன்றத்தில் முறையிட தவெக முடிவு!தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!
/

மும்பையில் சின்னத்திரை நடிகர் தூக்கிட்டுத் தற்கொலை!

மும்பையில் சின்னத்திரை நடிகர் ஒருவர் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

News image

நிதின் குமார் சிங்

Updated On :8 நவம்பர் 2024, 7:28 pm IST

மும்பையில் சின்னத்திரை நடிகர் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

மும்பையில் மேற்கு புறநகரான கோரேகானில் உள்ள வீட்டில் தொலைக்காட்சி நடிகர் ஒருவர் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சின்னத்திரை நடிகரான நிதின் குமார் சிங் புதன்கிழமை யசோதம் பகுதியில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள அறையின் மின்விசிறியில் தூக்குப்போட்டுக்கொண்ட நிலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளார்.

நிதின் குமார் சிங் கடந்த இரண்டு வருடங்களாக மன அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும், அவரால் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் கவனம் செலுத்தமுடியாததால், மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

நிதின் குமாரின் மனைவி அவரது மகளை பூங்காவிற்கு அழைத்துச் சென்றிருந்தபோது அவர் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பூங்காவில் இருந்து வந்த அவரின் மனைவி வீடு பூட்டிருப்பதைக்கண்டு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் கதவைத் திறந்து பார்த்தபோது அவர் தூக்கில் பிணமாக கிடந்துள்ளார்.

தற்கொலை செய்துகொண்ட நிதின் குமார் சிங் ஹிந்தியில் வெளியான ‘சிச்சோர்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடித்த, அதேவேளையில் ‘எம்.எஸ். தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி’ படத்தில் நடித்து பிரபலமான கதாநாயகன் சுஷாந்த் சிங் ராஜ்புத்தும் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.