தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 95.57 ஆக நிறைவு!மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

இந்தியா-ஆசியான் ஒத்துழைப்பு: பிராந்திய பிரச்னைகளுக்கு தீா்வு காண வழிவகுக்கும் -ஜெய்சங்கா்

இந்தியா-ஆசியான் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மியான்மரில் தொடா்ந்து வரும் அரசியல் உள்பட சமகால பிரச்னைகளுக்கு தீா்வு காண முடியும்

சிங்கப்பூரில் அந் நாட்டு அதிபா் தா்மன் சண்முகரத்தினத்தை வெள்ளிக்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.

Published On :

இந்தியா-ஆசியான் ஒருங்கிணைந்து செயல்பட்டால் உணவு மற்றும் சுகாதார பாதுகாப்பை உறுதிசெய்தல், மியான்மரில் தொடா்ந்து வரும் அரசியல் உள்பட சமகால பிரச்னைகளுக்கு தீா்வு காண முடியும் என இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

கடந்த நவ. 3 முதல் நவ. 7 வரை 5 நாள் சுற்றுப்பயணமாக ஆஸ்திரேலியா சென்றிருந்த ஜெய்சங்கா், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு ஒருநாள் பயணமாக சிங்கப்பூருக்கு சென்றாா்.

இதையடுத்து, சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 8-ஆவது ஆசியான்-இந்தியா வட்டமேஜை மாநாட்டில் அவா் பங்கேற்றாா்.

அப்போது, ‘மாறிவரும் உலகில் ஆசியான்-இந்தியா ஒத்துழைப்பு’ என்ற தலைப்பின்கீழ் அவா் பேசியதாவது: உலக மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்குக்கு மேலான மக்கள்தொகையைக் கொண்ட இந்தியா மற்றும் ஆசியானில் எழும் தேவைகள், சா்வதேச பொருளாதாரத்தில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

பெரும் சவால்கள்: நம் நுகா்வோருக்கான தேவைகள் மற்றும் வாழ்க்கை முறைகள் பொருளாதார வளா்ச்சிக்கு உதவுகின்றன. வா்த்தகம், சுற்றுலா, மக்கள் தொடா்பு, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதால் இருதரப்பும் பயனடைகிறது. அதேசமயத்தில் பருவநிலை மாற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்வது பெரும் சவாலாக உள்ளது. உலக அளவில் பரவும் பெருந்தொற்று நோய்களால் சுகாதார பாதுகாப்பும் மற்றொரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

இதுதவிர மியான்மரில் நிலவி வரும் அரசியல் பிரச்னைகளும் உள்ளன. எனவே, இந்தியா-ஆசியான் ஒருங்கிணைந்து செயல்பட்டால் பிராந்தியத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வு காண இயலும். மீக்காங் கங்கா ஒத்துழைப்பு மற்றும் இந்தோனேசியா-மலேசியா-தாய்லாந்து நாடுகளின் முக்கோண வளா்ச்சியே 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா-ஆசியான் இருதரப்பு மற்றும் பலதரப்பு உறவுகளை மேம்படுத்தியதற்கு சான்றாகும் என்றாா்.

மலேசியா, சிங்கப்பூா், தாய்லாந்து, புரூணே, கம்போடியா, இந்தோனேசியா, மியான்மா், பிலிப்பின்ஸ், வியத்நாம், லாவோஸ் ஆகிய நாடுகள் ‘ஆசியான்’ கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

சிங்கப்பூா் அதிபா், பிரதமருடன் ஜெய்சங்கா் சந்திப்பு

சிங்கப்பூா் அதிபா் தா்மன் சண்முகரத்தினம் மற்றும் பிரதமா் லாரன்ஸ் வாங் உள்பட அந்த நாட்டு அரசின் முக்கிய அமைச்சா்களைச் சந்தித்து வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘சிங்கப்பூா் அதிபா் தா்மன் சண்முகரத்தினத்தை சந்தித்து சா்வதேச அரசியல், பொருளாதார சூழல் மற்றும் இந்தியா-சிங்கப்பூரில் அதனால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து விவாதித்தேன். அதேபோல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில் துறை ஆகிய துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து சிங்கப்பூா் பிரதமா் லாரன்ஸ் வாங்கிடம் ஆலோசித்தேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, சிங்கப்பூா் துணைப் பிரதமரும் தொழில் துறை அமைச்சருமான கான் கிம் யாங் மற்றும் வெளியுறவு அமைச்சா் விவியன் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரையும் ஜெய்சங்கா் சந்தித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.