பிகார்: என்ஜினுடன் பெட்டிகளை இணைக்கும் போது உடல் நசுங்கி ரயில்வே ஊழியர் பலி
பரவுனி ரயில் நிலையத்தில் என்ஜினுடன் ரயில் பெட்டிகளை இணைக்கும் பணியில் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக ரயில்வே ஊழியர் உடல் நசுங்கி பாலியானார்.


பரவுனி ரயில் நிலையத்தில் என்ஜினுடன் ரயில் பெட்டிகளை இணைக்கும் பணியில் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக ரயில்வே ஊழியர் உடல் நசுங்கி பாலியானார்.
பிகார் மாநிலம், பரவுனி ரயில் நிலையத்தில் லக்னௌ-பரௌனி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகளை என்ஜினுடன் இணைக்கும் பணியில் ரயில்வே ஊழியர் அமர் குமார் ராவ் சனிக்கிழமை ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது இரண்டுக்கும் இடையே எதிர்பாராத விதமாக சிக்கிய ரயில்வே ஊழியர் உடல் நசுங்கி பலியானார். லோகோ பைலட் எஞ்சினை முன்னோக்கி இயக்குவதற்கு பதிலாக பின்னோக்கி இயக்கியதால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
சுற்றி இருந்தவர்கள் அலறல் சத்தம் கேட்டதும் லோகோ பைலட் இறங்கி தப்பியோடிவிட்டதாகவும், என்ஜினை மாற்றவோ அல்லது விபத்தைத் தடுக்க அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பான விடியோ காட்சி இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. மேலும் இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...