டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பிகார்: என்ஜினுடன் பெட்டிகளை இணைக்கும் போது உடல் நசுங்கி ரயில்வே ஊழியர் பலி

பரவுனி ரயில் நிலையத்தில் என்ஜினுடன் ரயில் பெட்டிகளை இணைக்கும் பணியில் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக ரயில்வே ஊழியர் உடல் நசுங்கி பாலியானார்.

News image
என்ஜினுடன் பெட்டிகளை இணைக்கும் போது உடல் நசுங்கி ரயில்வே ஊழியர் பலி- Photo Credit: NDTV
Updated On :9 நவம்பர் 2024, 11:38 am

DIN

பரவுனி ரயில் நிலையத்தில் என்ஜினுடன் ரயில் பெட்டிகளை இணைக்கும் பணியில் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக ரயில்வே ஊழியர் உடல் நசுங்கி பாலியானார்.

பிகார் மாநிலம், பரவுனி ரயில் நிலையத்தில் லக்னௌ-பரௌனி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகளை என்ஜினுடன் இணைக்கும் பணியில் ரயில்வே ஊழியர் அமர் குமார் ராவ் சனிக்கிழமை ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது இரண்டுக்கும் இடையே எதிர்பாராத விதமாக சிக்கிய ரயில்வே ஊழியர் உடல் நசுங்கி பலியானார். லோகோ பைலட் எஞ்சினை முன்னோக்கி இயக்குவதற்கு பதிலாக பின்னோக்கி இயக்கியதால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

சுற்றி இருந்தவர்கள் அலறல் சத்தம் கேட்டதும் லோகோ பைலட் இறங்கி தப்பியோடிவிட்டதாகவும், என்ஜினை மாற்றவோ அல்லது விபத்தைத் தடுக்க அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பான விடியோ காட்சி இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. மேலும் இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.