ஆளுநரிடம் அழைப்பில்லை! உச்சநீதிமன்றத்தில் முறையிட தவெக முடிவு!தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!விஜய் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் நிறுத்தம்! பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

மத ரீதியாக அதிகாரிகளுக்கென வாட்ஸ்அப் குழு: ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

வாட்ஸ்அப்-இல் மத ரீதியான குழு: ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம்

News image

கோப்புப்படம் | தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

Updated On :11 நவம்பர் 2024, 11:14 pm IST

திருவனந்தபுரம்: வாட்ஸ்அப்-இல் ‘ஹிந்து அதிகாரிகள்’ என்ற பெயரில் குழு உருவாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கேரளத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒழுக்க விதிகளை மீறி செயல்பட்டதாக ஐஏஎஸ் அதிகாரிகள் மீது கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

வாட்ஸ்அப்-இல் மத ரீதியான குழுக்கள் உருவாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் தொழில்துறை இயக்குநராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி கே. கோபாலகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தனது ஸ்மார்ட்ஃபோனிலிருந்து ‘மல்லு ஹிந்து அதிகாரிகள்’ என்ற பெயரில் ஒரு வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கடந்த சில நாள்களுக்கு முன் புகாரளித்திருந்தார்.

ஆனால் அவரது ஸ்மார்ட்ஃபோன் ஹேக் செய்யப்படவில்லை என்பதும், வேரு யாரும் அத்னை இயக்கவில்லை என்பதும் இணையவழிக் குற்றச்செயல் தடுப்பு பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இதையடுத்து அவரது குற்றச்சாட்டில் உண்மையில்லை என்பது நிரூபனமாகியுள்ளது. இந்த நிலையில், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல, மூத்த அதிகாரிகளை சமூக வலைதளங்களில் தரக்குறைவாக விமர்சித்த குற்றச்சாட்டில் வேளாண் துறை சிறப்பு செயலர் என். பிரஷாந்த் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.