மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பயணித்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படையினர் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இறுதி கட்டப் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், பால்கர் மாவட்டத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் பங்கேற்க ஹெலிகாப்டரில் முதல்வரும் சிவசேனை(ஷிண்டே அணி) தலைவருமான ஏக்நாத் ஷிண்டே பயணித்துள்ளார்.
அவரது ஹெலிகாப்டர் பால்கரில் தரையிறங்கியபோது, தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். ஷிண்டே கொண்டு வந்த பை உள்ளிட்டவற்றிலும் சோதனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக, சிவசேனை(உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரேவின் ஹெலிகாப்டரை தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து சோதனை நடத்தப்பட்டதாகவும், தேர்தலில் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பயணித்த ஹெலிகாப்டர் சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவரின் மகளுக்கு அரசுப் பணி!

சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்புப் பணி: துணை ராணுவப் படையினர் அணிவகுப்பு!

மகாராஷ்டிரத்தில் 2025-ல் மட்டும் 41 புலிகள் உயிரிழப்பு!

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் சல்மான் கான் கலந்துகொள்வதில் என்ன தவறு: ஏக்நாத் ஷிண்டே
வீடியோக்கள்
"ஈகைப் பெருநாள் மலரின் நோக்கம் இதுதான்": தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்
தினமணி வீடியோ செய்தி...

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

