ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஜனநாயக திருவிழாவில் முழு ஆர்வத்துடன் வாக்களியுங்கள்: பிரதமர் மோடி!

ஜனநாயக திருவிழாவில் முழு ஆர்வத்துடன் வாக்களியுங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

News image
பிரதமர் மோடி (கோப்புப் படம்)
Updated On :13 நவம்பர் 2024, 2:54 am

DIN

ஜனநாயக திருவிழாவில் முழு ஆர்வத்துடன் வாக்களியுங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் சுற்று வாக்குப்பதிவில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜார்க்கண்டில் உள்ள 43 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. முன்னாள் முதல்வர் சம்பயி சோரன், முன்னாள் எம்பி கீதா கோரா உள்பட மொத்தம் 683 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

15 மாவட்டங்களில் காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “இன்று ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த ஜனநாயகத் திருவிழாவில் முழு ஆர்வத்துடன் வாக்களிக்குமாறு அனைத்து வாக்காளர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். முதன்முறையாக வாக்களிக்கப் போகும் இளம் வாக்காளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்!” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.