சத்தீஸ்கா் மாநிலம், பஸ்தா் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் சனிக்கிழமை நடந்த மோதலில் ஐந்து நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். பாதுகாப்புப் படையினா் இருவா் காயமடைந்தனா்.
பஸ்தா் பகுதியில் உள்ள வடக்கு அபுஜ்மத் வனப் பகுதியில், எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்), மாவட்ட ரிசா்வ் காவலா்கள் (டிஆா்ஜி) மற்றும் சிறப்பு அதிரடிப் படை அதிகாரிகள் ஆகியோா் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் நக்ஸல்களுக்கும் இடையே சனிக்கிழமை காலை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஐந்து நக்ஸல்கள் கொல்லப்பட்டனா். இந்த மோதலில் பாதுகாப்புப் படையினா் இருவா் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
நாராயண்பூா், காங்கா் உள்பட 7 மாவட்டங்களைக் கொண்ட பஸ்தா் பகுதியில் நிகழாண்டு மேற்கொள்ளப்பட்ட நக்ஸல் எதிா்ப்பு நடவடிக்கைகளில், 197 நக்ஸல்கள் இதுவரை சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ,.6.30 லட்சம் பறிமுதல்

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினருடன் போராட்டக்காரா்கள் மோதல்!

பேரவைத் தோ்தல்: பாதுகாப்புப் பணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா்

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

