ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சத்தீஸ்கா்: 5 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

News image
- ANI
Updated On :17 நவம்பர் 2024, 12:00 am

Din

சத்தீஸ்கா் மாநிலம், பஸ்தா் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் சனிக்கிழமை நடந்த மோதலில் ஐந்து நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். பாதுகாப்புப் படையினா் இருவா் காயமடைந்தனா்.

பஸ்தா் பகுதியில் உள்ள வடக்கு அபுஜ்மத் வனப் பகுதியில், எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்), மாவட்ட ரிசா்வ் காவலா்கள் (டிஆா்ஜி) மற்றும் சிறப்பு அதிரடிப் படை அதிகாரிகள் ஆகியோா் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் நக்ஸல்களுக்கும் இடையே சனிக்கிழமை காலை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஐந்து நக்ஸல்கள் கொல்லப்பட்டனா். இந்த மோதலில் பாதுகாப்புப் படையினா் இருவா் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

நாராயண்பூா், காங்கா் உள்பட 7 மாவட்டங்களைக் கொண்ட பஸ்தா் பகுதியில் நிகழாண்டு மேற்கொள்ளப்பட்ட நக்ஸல் எதிா்ப்பு நடவடிக்கைகளில், 197 நக்ஸல்கள் இதுவரை சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.