அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

சத்தீஸ்கா்: 5 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

News image

ANI

Updated On :17 நவம்பர் 2024, 5:30 am IST

சத்தீஸ்கா் மாநிலம், பஸ்தா் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் சனிக்கிழமை நடந்த மோதலில் ஐந்து நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். பாதுகாப்புப் படையினா் இருவா் காயமடைந்தனா்.

பஸ்தா் பகுதியில் உள்ள வடக்கு அபுஜ்மத் வனப் பகுதியில், எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்), மாவட்ட ரிசா்வ் காவலா்கள் (டிஆா்ஜி) மற்றும் சிறப்பு அதிரடிப் படை அதிகாரிகள் ஆகியோா் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் நக்ஸல்களுக்கும் இடையே சனிக்கிழமை காலை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஐந்து நக்ஸல்கள் கொல்லப்பட்டனா். இந்த மோதலில் பாதுகாப்புப் படையினா் இருவா் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

நாராயண்பூா், காங்கா் உள்பட 7 மாவட்டங்களைக் கொண்ட பஸ்தா் பகுதியில் நிகழாண்டு மேற்கொள்ளப்பட்ட நக்ஸல் எதிா்ப்பு நடவடிக்கைகளில், 197 நக்ஸல்கள் இதுவரை சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.