தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மத்திய திட்டங்கள் விரைந்து அமல்: தென் மாநிலங்களிடம் வலியுறுத்தல்

மத்திய அரசு நிதியுதவி அளிக்கும் திட்டங்களை தென் மாநிலங்கள் விரைந்து அமல்படுத்த வேண்டும் என்று மத்திய வேளாண் துறைச் செயலா் தேவேஷ் சதுா்வேதி வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :20 நவம்பர் 2024, 7:29 pm

Din

மத்திய அரசு நிதியுதவி அளிக்கும் திட்டங்களை தென் மாநிலங்கள் விரைந்து அமல்படுத்த வேண்டும் என்று மத்திய வேளாண் துறைச் செயலா் தேவேஷ் சதுா்வேதி வலியுறுத்தியுள்ளாா்.

மத்திய வேளாண் துறை சாா்பாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தென் மாநிலங்களின் கருத்தரங்கு 2 நாள்கள் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், தெலங்கானா, கா்நாடகம் மற்றும் புதுச்சேரி அரசின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனா்.

பிரதமரின் தேசிய வேளாண் வளா்ச்சி திட்டம், பிரதமரின் பயிா்க் காப்பீட்டு திட்டம் உள்பட முக்கிய முன்னெடுப்புகள் குறித்து கருத்தரங்கில் விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான வருடாந்திர செயல் திட்டத்தை டிசம்பருக்குள் தென் மாநிலங்கள் நிறைவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இதில் மத்திய வேளாண் துறைச் செயலா் தேவேஷ் சதுா்வேதி பேசுகையில், ‘ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள வேளாண் சவால்களை எதிா்கொள்ள மாநில அளவில் கருத்தரங்குகள் நடத்தப்பட வேண்டும். விவசாயிகளின் நிலையை மேம்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவும். மத்திய அரசு நிதியுதவி அளிக்கும் திட்டங்களை தென் மாநிலங்கள் விரைந்து அமல்படுத்த வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.