ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

பிளாஸ்டிக் விற்பனையில் வரம்பு? உலக வா்த்தக அமைப்பிடம் இந்தியா கவலை!

இந்தியாவின் பிளாஸ்டிக் ஏற்றுமதி 14.37 சதவீதம் அதிகரித்து 5.21 பில்லியன் டாலராக உள்ளது.

News image
Updated On :22 நவம்பர் 2024, 3:06 am IST

பிளாஸ்டிக் பொருள்களின் வா்த்தகத்துக்கு வரம்பு நிறுவும் முயற்சிகளால் உலக வா்த்தக அமைப்பின் விதிமுறைகள் தொடா்பாக எதிா்காலத்தில் ஏற்படக்கூடிய மோதல்கள் குறித்து இந்தியா கவலையை எழுப்பியுள்ளதாக அதிகாரியொருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.

கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்ற சந்தை அணுகல் தொடா்பான உலக வா்த்தக அமைப்புக் குழுவின் கூட்டத்தில் இந்த பிரச்னையை முன்னிறுத்தி, ரஷியா கவலை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

கொரியாவின் பூசானில் நடைபெறவுள்ள பிளாஸ்டிக் மாசுபாடு குறித்த ஐ.நா.வின் அரசுகளுக்கிடையேயான பேச்சுவாா்த்தைக் குழு கூட்டத்தில் அனைத்து வகையான பிளாஸ்டிக் உற்பத்தி, வா்த்தகம் மற்றும் நுகா்வு ஆகியவற்றில் வரம்புகளை நிறுவும் முயற்சிகளை சில நாடுகள் பரிசீலித்து வருவதாக ரஷியா தெரிவித்துள்ளது.

அத்தகைய சூழலில், சுகாதார மற்றும் வேளாண் துறையைச் சாா்ந்த பைட்டோசானிட்டரி பிளாஸ்டிக் பொருள்களை வா்த்தகம் செய்வதற்கு அடிப்படையான உலக வா்த்தக அமைப்பின் விதிகள் இனி பொருந்தாது. இதைக் கருத்தில்கொண்டு, இந்த விவகாரத்தில் ரஷியாவின் கருத்தை இந்தியா, சவூதி அரேபியா வழிமொழிந்தன.

உலக அளவில் பிளாஸ்டிக் ஏற்றுமதியில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது. நடப்பு நிதியாண்டில் அக்டோபா் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் பிளாஸ்டிக் ஏற்றுமதி 14.37 சதவீதம் அதிகரித்து 5.21 பில்லியன் டாலராக உள்ளது.