6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பஸ்தர் பகுதியில் மீண்டும் அமைதி திரும்பியுள்ளது: சத்தீஸ்கர் முதல்வர்

குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே தனது அரசின் முன்னுரிமை..

News image
சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய்
Updated On :22 நவம்பர் 2024, 10:48 am

DIN

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 நக்சல்கள் கொல்லப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தனர்.

கொரஜ்குடா, தாண்டேஸ்புரம், நகரம் மற்றும் பந்தர்பதார் ஆகிய கிராமங்களின் வனப்பகுதியில் நக்சல்களின் கோண்டா மற்றும் கிஸ்டாரம் பகுதி குழுக்களைச் சேர்ந்த மாவோயிஸ்டுகள் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பெஜ்ஜி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வனப்பதியில் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் கூட்டுக்குழு ஒன்றிணைந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பத்து நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று காவல் கண்காணிப்பாளர் உறுதி செய்துள்ளார்.

மேலும், சம்பவ இடத்தில் ஐஎன்எஸ்ஏஎஸ் ரக துப்பாக்கி, ஏகே 47 ரக துப்பாக்கி, ரைபிள் (எஸ்எல்ஆர்) உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. மாவட்ட ரிசர்வ் காவலர் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பாக முதல்வர் விஷ்ணு தியோ சாய் கூறுகையில்,

பஸ்தர் பகுதியில் அமைதியை நிலைநாட்டுவது, வளர்ச்சியை எளிதாக்குவது மற்றும் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே தனது அரசின் முன்னுரிமை.

பஸ்தரில் மக்களின் வளர்ச்சி, அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது மாநில அரசின் முதன்மையான முன்னுரிமையாகும். அமைதி, வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் சகாப்தம் பஸ்தாருக்கு திரும்பியுள்ளது.

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் ஒழிக்கப்படுவது உறுதி என்று பாதுகாப்புப் படையினரின் அசாத்திய துணிச்சலுக்கும், அர்ப்பணிப்பிற்கும் முதல்வர் பாராட்டுத் தெரிவித்தார்.

மார்ச் 2026க்குள் சத்தீஸ்கரில் இருந்து நக்சலைட்டுகளை ஒழிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நிர்ணயித்த இலக்கை நிறைவேற்றத் திட்டமிட்ட வகையில் முன்னேறி வருகிறோம் என்று அவர் கூறினார்.

இந்த சம்பவத்துடன், சுக்மா உள்பட ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் தனித்தனி துப்பாக்கிச்சூட்டுகளைத் தொடர்ந்து இந்தாண்டு இதுவரை 207 நக்சலைட்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்று போலீசார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.