கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடக்கம்! ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு! டாஸ்மாக் ஊழியா்களுக்கு அக்.1 முதல் இஎஸ்ஐ திட்டம் அறிவிப்பு நீதிபதிகளின் ஓய்வு வயதை 61-ஆக உயா்த்த பரிசீலினை: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் மூலக்கூறு மருந்துகள் இறக்குமதி மீது 100% வரி: அமெரிக்கா திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்!
/

குஜராத் இடைத்தேர்தல்: முன்னிலையில் காங்கிரஸின் குலாப்சிங்!

காங்கிரஸ் வேட்பாளர் குலாப்சிங் 7611 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்..

News image

குஜராத் பேரவை இடைத்தேர்தல்

Updated On :23 நவம்பர் 2024, 11:12 am IST

குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள வாவ் சட்டப்பேரவைக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் குலாப்சிங் பிரபாய் ராஜ்புத் தனது நெருங்கிய போட்டியாளரும், பாஜக வேட்பாளருமான ஸ்வரூப்ஜி தாக்கூரைக் காட்டிலும் 7611 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பாலன்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வரும் மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையைப் பதிவு செய்தனர்.

காங்கிரஸ் - 29,687 வாக்குகளும், பாஜக 22076 வாக்குகளும் பெற்றுள்ளனர். பாஜகவை விட 7,611 வாக்குகள் முன்னிலையில் காங்கிரஸ் உள்ளது.

சுயேட்சை வேட்பாளர் மவ்ஜிபடேல் 8015 வாக்குகள் பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் வெளியிட்ட தகவலில் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை 23 சுற்றுகளாக மொத்தம் 321 வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்று வருகின்றது.

நவம்பர் 13ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் 70. 55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வாவ் தேர்தல் மும்முனைப் போராட்டமாக மாறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.