FOLLOW US

ON GOOGLE DISCOVER

எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

மத்தியப் பிரதேச இடைத்தேர்தல்: முன்னிலையில் காங்கிரஸ்... பாஜகவுக்கு பின்னடைவு!

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை...

News image

காங்கிரஸ் கொடியுடன் தொண்டர்கள். - கோப்புப் படம்

Updated On :3 ஆகஸ்ட் 2026, 4:04 pm IST

மத்தியப் பிரதேசத்தின் தாதியா சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது.

ஜூலை 30-ல் மத்தியப் பிரதேசத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில் கன்ஷ்யாம் சிங், பாஜக சார்பில் அசுதோஷ் திவாரியும் போட்டியிட்டனர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பாலிடெக்னிக் கல்லூரியில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

மொத்தம் உள்ள 15 சுற்றுகளில் எட்டாவது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் கன்ஷ்யாம் சிங் 38,264 வாக்குகளையும், திவாரி 31,681 வாக்குகளையும் பெற்றனர்.

பாஜகவின் அசுதோஷ் திவாரியை விட 6,583 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். அதேசமயம், ஆசாத் சமாஜ் கட்சி வேட்பாளர் தாமோதர் யாதவ் 26,506 வாக்குகளைப் பெற்றார்.

மோசடி வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேந்திர பாரதிக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தில்லி நீதிமன்றம் மூன்றாண்டு சிறைத்தண்டனை விதித்ததாலும், அதைத் தொடர்ந்து அவரது சட்டப்பேரவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதாலும் இந்த இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

தாதியா இடைத்தேர்தலில் கன்ஷ்யாம் சிங் மற்றும் அசுதோஷ் திவாரி உள்பட மொத்தம் 21 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஜூலை 30 அன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் 71.44 சதவீத வாக்குகள் பதிவாகின.

காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலையில் உள்ளதால், மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளனர். கட்சித் தொண்டர்கள் இனிப்பைப் பரிமாறி வருகின்றனர்.

After trailing in the first two rounds, Congress candidate Ghanshyam Singh surged ahead with a lead of 6,583 votes over BJP's Ashutosh Tiwari as counting was underway on Monday for the Datia assembly bypoll in Madhya Pradesh, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.