மகாராஷ்டிரத்தில் ஆளும் மகாயுதி கூட்டணி வெற்றியை உறுதி செய்திருக்கும் நிலையில், இதனை மக்களின் தீர்ப்பு என ஏற்றுக்கொள்ள முடியாது என்று சிவசேனை (உத்தவ்) தலைவர் சஞ்சய் ரௌத் கூறியிருக்கிறார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் முடிவில் சந்தேகம் உள்ளது என்றும் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ரௌத் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த தேர்தல் முடிவு, மக்களின் தீர்ப்பு என்று எங்கள் கட்சி ஏற்காது என்றும், இந்த தேர்தல் முடிவில் சந்தேகம் இருப்பதாகவும், அவ்வளவு ஏன், இந்த தேர்தல் முடிவை எவ்வாறு ஏற்றுக்கொள்ளவது என மக்களே சிந்தித்துக்கொண்டிருப்பார்கள் என்றும் குறிப்பிட்டிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது.
இதையும் படிக்க.. 5.07 லட்சம் வாக்குகள்! இமாலய வெற்றியை நோக்கி பிரியங்கா!
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில், பணம் செல்வாக்குப் படைத்திருக்கிறது. ஏக்நாத் ஷிண்டேவின் அனைத்து எம்எல்ஏக்களும் எப்படி வெற்றி பெற முடியும்? மகாராஷ்டிர மக்களின் கோபத்துக்கு ஆளான அஜித் பவார் எப்படி வெற்றி பெற முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இந்த பேச்சுக்கு, பாஜக தலைவர் பிரவீன் தாரேகர் பதில் அளித்துள்ளார். சஞ்சய் ரௌத் தனது விமானத்தை தரையில் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. மாநிலத்திலும், மத்தியிலும் பாஜக ஆட்சி அமைந்தால், மாநிலம் நல்ல வளர்ச்சியை அடையும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஜனநாயகம் தடுமாறும்போது...

பாமக கொடி, சின்னம் விவகாரம்: ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுப்பு

பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!

ஒற்றை விரலில் உங்கள் வலிமை!
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

