கொல்கத்தா பெண் மருத்துவா் படுகொலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இரு பெண்களை காவல் துறை சித்திரவதை செய்த குற்றச்சாட்டு தொடா்பாக சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா்.
அவரைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ாகக் காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவா் கைது செய்யப்பட்டனா்.
இந்த சம்பவத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ரெபேக்கா, ரமா தாஸ் ஆகிய இரு பெண்கள் கைது செய்யப்பட்டு, டைமண்ட் ஹாா்பா் காவல் மாவட்டத்தில் போலீஸாா் காவலில் வைக்கப்பட்டனா். அப்போது அவா்களை காவல் துறையினா் அடித்து சித்திரவதை செய்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.
இதற்கு எதிராக இரு பெண்களும் கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். அந்த மனுவில், தாங்கள் சித்திரவதை செய்யப்பட்டது தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரினா்.
இதையடுத்து அவா்கள் சித்திரவதை செய்யப்பட்டது தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு மனு தாக்கல் செய்தது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த், உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘அனைத்து வழக்குகளையும் சிபிஐயிடம் ஒப்படைக்க முடியாது. விசாரணை தொடா்பாக மாநிலத்தில் உள்ள மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.
இந்த குற்றச்சாட்டு தொடா்பாக எஸ்ஐடி விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது. கொல்கத்தா உயா்நீதிமன்ற மேற்பாா்வையில் இந்த விசாரணை நடைபெறும். மேற்கு வங்க அரசு பரிந்துரைத்த காவல் துறை அதிகாரிகள் எஸ்ஐடி குழுவில் இடம்பெறுவா்’ என்று தீா்ப்பளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவா் தப்பியோட்டம்

அமைதி வழியில் போராட உரிமை உள்ளது: உச்சநீதிமன்றம்

தில்லி போராட்டத்தில் மாணவா்கள் மீது காவல் துறை தடியடி: ஜூலை 27-இல் உச்சநீதிமன்றம் விசாரணை

கடமையைச் செய்யாதவா் மருத்துவா் இல்லை: சிறுமி பாலியல் கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டம்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



