மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

உ.பி.யில் சாலை விபத்து: 5 பேர் பலி, 6 பேர் படுகாயம்

சாலையோரம் இருந்த பள்ளத்தில் விழுந்ததில் சோகம்..

News image

சாலை விபத்து

Updated On :30 நவம்பர் 2024, 5:44 pm IST

உத்தரப் பிரதேச மாநிலம் ஷ்ரவஸ்தி மாவட்டத்தில் அதிவேகமாக வந்த கார் ஆட்டோவின் மீது மோதியதில் இரண்டு வாகனங்களும் சாலையோரம் இருந்த பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் ஒரு பெண் உள்பட மேலும் ஆறு பேர் படுகாயமடைந்தனர், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பஹ்ரைச்-ஷ்ராவஸ்தி சாலையில் கிலாவுலா மற்றும் இகோவுனா இடையேயான இடத்தில் மதியம் 12 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறை கண்காணிப்பாளர் கன்ஷ்யாம் சௌராசியா தெரிவித்தார்.

பஹ்ரைச்சில் இருந்து இகோவுனா நோக்கி சாதாரண வேகத்தில் பயணிகள் நிறைந்த ஆட்டோவில் கார் பின்னால் இருந்து மோதியது. மோதல் பலமாக இருந்ததால் ஆட்டோ சாலையோரம் இருந்த பள்ளத்தில் விழுந்ததாகவும், கார் சமநிலையை இழந்து அதே பள்ளத்தில் விழுந்ததாகவும் அவர் கூறினார்.

ஆட்டோவில் ஓட்டுநர் உள்பட ஒன்பது பேரும், காரில் இரண்டு பேரும் இருந்தனர். ஆட்டோவில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் மூவர் இகோவுனா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர். காயமடைந்த மீதமுள்ள ஆறு பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்கள் மேல் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.

விபத்து குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.