என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

உ.பி.யில் சாலை விபத்து: 5 பேர் பலி, 6 பேர் படுகாயம்

சாலையோரம் இருந்த பள்ளத்தில் விழுந்ததில் சோகம்..

News image

சாலை விபத்து

Updated On :30 நவம்பர் 2024, 5:26 pm IST

உத்தரப் பிரதேச மாநிலம் ஷ்ரவஸ்தி மாவட்டத்தில் அதிவேகமாக வந்த கார் ஆட்டோவின் மீது மோதியதில் இரண்டு வாகனங்களும் சாலையோரம் இருந்த பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் ஒரு பெண் உள்பட மேலும் ஆறு பேர் படுகாயமடைந்தனர், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பஹ்ரைச்-ஷ்ராவஸ்தி சாலையில் கிலாவுலா மற்றும் இகோவுனா இடையேயான இடத்தில் மதியம் 12 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறை கண்காணிப்பாளர் கன்ஷ்யாம் சௌராசியா தெரிவித்தார்.

பஹ்ரைச்சில் இருந்து இகோவுனா நோக்கி சாதாரண வேகத்தில் பயணிகள் நிறைந்த ஆட்டோவில் கார் பின்னால் இருந்து மோதியது. மோதல் பலமாக இருந்ததால் ஆட்டோ சாலையோரம் இருந்த பள்ளத்தில் விழுந்ததாகவும், கார் சமநிலையை இழந்து அதே பள்ளத்தில் விழுந்ததாகவும் அவர் கூறினார்.

ஆட்டோவில் ஓட்டுநர் உள்பட ஒன்பது பேரும், காரில் இரண்டு பேரும் இருந்தனர். ஆட்டோவில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் மூவர் இகோவுனா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர். காயமடைந்த மீதமுள்ள ஆறு பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்கள் மேல் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.

விபத்து குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.