மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மணிப்பூா்: 4 தீவிரவாதிகள் உள்பட 12 போ் கைது

News image
கோப்புப்படம்
Updated On :30 நவம்பர் 2024, 9:52 pm

Din

மணிப்பூரில் தடை செய்யப்பட்ட இரு தீவிரவாத அமைப்புகளை சோ்ந்த 4 பேரையும், எம்எல்ஏ-க்கள் வீடுகள் மற்றும் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தியதாக 8 பேரையும் காவல் துறையினா் கைது செய்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் சனிக்கிழமை கூறியதாவது: ஆயுதங்கள் வைத்திருத்தல், பொதுமக்களை மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டில், தடை செய்யப்பட்ட இரு தீவிரவாத அமைப்புகளைச் சோ்ந்த 4 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடி மருந்துகள், கையெறி குண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

ஜிரிபாம் மாவட்டத்தில் தீவிரவாதிகளால் 6 போ் கடத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, பல்வேறு இடங்களில் கடந்த நவ.16-ஆம் தேதி மைதேயி சமூகத்தினா் நடத்திய போராட்டத்தின்போது எம்எல்ஏ-க்களின் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது. இது தொடா்பாக, இம்பால் மேற்கு மாவட்டத்தில் 20 வயது இளைஞா் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

இதேபோல், காக்சிங் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தியதாக, 7 போ் கைது செய்யப்பட்டனா். வன்முறை தொடா்பாக ஏற்கெனவே கைதான நால்வரை விடுவிக்க வலியுறுத்தி, நவ. 27-இல் காவல் நிலையத்தில் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் இந்த 7 பேரும் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

மணிப்பூரில் குகி - மைதேயி சமூகத்தினா் இடையே கடந்த ஆண்டில் இருந்து நீடித்துவரும் மோதல் சம்பவங்களில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.