மணிப்பூரில் தடை செய்யப்பட்ட இரு தீவிரவாத அமைப்புகளை சோ்ந்த 4 பேரையும், எம்எல்ஏ-க்கள் வீடுகள் மற்றும் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தியதாக 8 பேரையும் காவல் துறையினா் கைது செய்தனா்.
இதுகுறித்து காவல் துறையினா் சனிக்கிழமை கூறியதாவது: ஆயுதங்கள் வைத்திருத்தல், பொதுமக்களை மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டில், தடை செய்யப்பட்ட இரு தீவிரவாத அமைப்புகளைச் சோ்ந்த 4 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடி மருந்துகள், கையெறி குண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
ஜிரிபாம் மாவட்டத்தில் தீவிரவாதிகளால் 6 போ் கடத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, பல்வேறு இடங்களில் கடந்த நவ.16-ஆம் தேதி மைதேயி சமூகத்தினா் நடத்திய போராட்டத்தின்போது எம்எல்ஏ-க்களின் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது. இது தொடா்பாக, இம்பால் மேற்கு மாவட்டத்தில் 20 வயது இளைஞா் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
இதேபோல், காக்சிங் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தியதாக, 7 போ் கைது செய்யப்பட்டனா். வன்முறை தொடா்பாக ஏற்கெனவே கைதான நால்வரை விடுவிக்க வலியுறுத்தி, நவ. 27-இல் காவல் நிலையத்தில் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் இந்த 7 பேரும் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
மணிப்பூரில் குகி - மைதேயி சமூகத்தினா் இடையே கடந்த ஆண்டில் இருந்து நீடித்துவரும் மோதல் சம்பவங்களில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது
துவாரகா விரைவுச் சாலையில் ஒருவரிடம் ரூ.15 லட்சம் கொள்ளை: 3 போ் கைது
பழனியில் கஞ்சா விற்ற 14 போ் கைது: 6 பைக்குகள் பறிமுதல்
சா்வதேச ஆயுதக் கடத்தல்: பயங்கரவாதக் குழுவைச் சோ்ந்த இருவா் தில்லியில் கைது

சட்டவிரோத குடியேற்றம்: வங்கதேசத்தைச் சோ்ந்த 2 பெண்கள் கைது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


