ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!யுஜிசி - நெட் தேர்வுக்கான விடைக்குறிப்பு விரைவில் வெளியீடு!கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

பிரதமரின் அழைப்பை ஏற்க மறுத்த வினேஷ் போகத்! காரணம் என்ன?

பாரீஸ் ஒலிம்பிக் தோல்விக்குப் பிறகு பிரதமர் மோடியின் அழைப்பினை வினேஷ் போகத் ஏற்க மறுத்ததாக நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

News image

பிரதமர் மோடி, வினேஷ் போகத்.

Updated On :2 அக்டோபர் 2024, 8:40 pm IST

பாரீஸ் ஒலிம்பிக் தோல்விக்குப் பிறகு பிரதமர் மோடியின் அழைப்பினை முன்னாள் மல்யுத்த வீராங்கனை ஏற்க மறுத்ததாகக் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் முதல்முறையாக இந்தியாவை சேர்ந்த வினேஷ் போகத் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி கடைசி நிமிடத்தில் 100 கிராம் கூடுதல் எடை இருந்ததால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

பிறகு ஓய்வை அறிவித்த வினேஷ் போகத் ரயில்வே பணியை ராஜிநாமா செய்தார். பின்னர், செப்.6இல் காங்கிரஸில் இணைந்தார்.

ஜுலானா தொகுதியில் வினேஷ் போகத் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில் நேர்காணலில் வினேஷ் போகத் பாரீஸ் ஒலிம்பிக் தோல்விக்குப் பிறகு பிரதமரிடம் வந்த அழைப்பு குறித்து பேசியதாவது:

பிரதமர் மோடியிடம் இருந்து அழைப்பு வந்தது. ஆனால் அது நேரடியாக அவரிடமிருந்து அழைப்பு வரவில்லை. இந்திய அதிகாரிகள் பிரதமர் மோடி என்னிடம் பேச விரும்புவதாகக் கூறினார்கள். நானும் தயாராக இருந்தேன். ஆனால், அவர்கள் சில நிபந்தனைகளை வித்தித்தார்கள். அதில் - என்னுடைய அணியினர் யாரும் அருகில் இருக்கக் கூடாது. பிரதமரின் சார்பில் இரண்டு நபர்கள் நாங்கள் பேசுவதை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட இருப்பதாகக் கூறினார்கள்.

நான் எனது கடின உழைப்பையும் உணர்ச்சிகளையும் சமூக வலைதளங்களில் கிண்டல்களுக்கு உள்ளாக விரும்பவில்லை.

பிரதமர் மோடி நிஜமான அக்கறையுடன் அழைத்திருந்தால் நான் நிச்சயமாகப் பேசியிருப்பேன். அவருக்கு விளையாட்டு வீரர்கள்/ வீராங்கனைகள் மீது உண்மையான அக்கறை இருந்தால் விடியோ பதிவு செய்யாமலேயே அழைத்திருப்பார்.

ஒருவேளை அவர் பேசுவதாக இருந்தால் நான் கடந்த 2 வருட விஷயங்கள் குறித்து கேட்பேன் என அவருக்குத் தெரிந்திருக்கும். அதனால்தான் நான் செல்ஃபோன் வைத்துக்கொள்ள அனுமதி வழங்கவில்லை. அவர்கள் என்னுடைய விடியோவை எடிட் செய்யலாம். ஆனால், நான் நிஜமான விடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுவிடுவேன் என்பதால் அவர்கள் என்னைப் பேச அனுமதிக்கவில்லை என நினைக்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.