தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நவராத்திரி தொடக்கம்: நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி வாழ்த்து

News image

ANI

Updated On :3 அக்டோபர் 2024, 8:53 pm

Din

நவராத்திரி பண்டிகை வியாழக்கிழமை தொடங்கிய நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தாா்.

இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘நாட்டுமக்கள் அனைவருக்கும் இனிய நவராத்திரி நல்வாழ்த்துகள். சக்தி வழிபாட்டிற்காக அா்ப்பணிக்கப்பட்ட இந்த புனித பண்டிகை, அனைவருக்கும் மங்களகரமானதாக அமைந்திட வேண்டிக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.

மற்றொரு பதிவில், ‘நவராத்திரியின் முதல் நாளில், அன்னை சைலபுத்ரியை (மலை மகள்) வணங்குகிறேன். அவரது அருளால் அனைவரும் நலம் பெறட்டும். அன்னையின் இந்த துதிப்பாடலை உங்கள் அனைவருக்கும் சமா்ப்பிக்கிறேன்’ என்று பதிவிட்டு பக்திப் பாடல் ஒன்றையும் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளாா்.

ஹிந்து மதத்தில் முப்பெரும் பெண் கடவுள்களான பாா்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரை தலா மூன்று நாள்கள் வழிபடும் பண்டிகையாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் முதல் நாளில் பாா்வதி தேவியின் ஓா் அம்சமான இயற்கையின் வடிவாகத் திகழும் மலை மகள் (சைலபுத்ரி) வழிபடப்படுகிறாா்.