நாட்டில் வேலையின்மையால் இந்திய இளைஞர்கள், போர் நடக்கும் நாடுகளில் வேலை பார்த்து வருவதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
மோடி அரசால் நிகழும் வேலையின்மையால் இந்திய இளைஞர்கள், போர் நடக்கும் நாடுகளில் உயிரைப் பணயம் வைத்து வேலை பார்த்து வருவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தனது எக்ஸ் பக்கத்தில் ``மேற்கு ஆசியாவில் நடந்து வரும் போருக்கு மத்தியில், அப்பகுதிகளில் இந்திய இளைஞர்களை மோடி அரசின் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் அனுப்பியுள்ளது. 15000 இந்தியத் தொழிலாளர்களை, இஸ்ரேலில் போர் நடக்கும் பகுதிகளுக்கு அருகில் பணிபுரிய இந்தியா அனுப்பியுள்ளது.
None less than Modi Govtâs National Skill Development Cooperation is facilitating the recruitment of about 15,000 Indian workers in Israel, amidst the war in West Asia.
— Mallikarjun Kharge (@kharge) October 4, 2024
Earlier many Indian youth were duped by dubious agents to go for the Russia-Ukraine war. Many have lost theirâ¦
இதன்மூலம், பொய்யான வாக்குறுதிகள் அளித்து இந்திய இளைஞர்களை, போருக்கு மறைமுகமாக மோடி அரசு அனுப்பி வைத்துள்ளது. முன்னதாக, ரஷியா-உக்ரைன் போரில் சேர பொய்யான ஏஜென்டுகளின் அழைப்புகளின்பேரில் சென்ற இந்திய இளைஞர்கள், தங்கள் உயிர்களை இழந்தனர்.
போர் நடக்கும் பகுதி என்றாலும்கூட, வேலை செய்வதற்கு அதிக சம்பளம் கிடைப்பதால் இந்திய இளைஞர்கள் வேறுவழியின்றி அங்கு செல்கின்றனர். இது மோடி அரசால் இந்தியாவில் நிகழும் பரவலான வேலையின்மையின் விளைவேயாகும்.
உயிரைப் பணயம் வைத்து, போர் நடக்கும் பகுதிகளில் இந்திய இளைஞர்கள் வேலை பார்ப்பது, மோடி அரசின் வேலைவாய்ப்புகள் குறித்த கூற்றையும், அவரது தோல்வியையும் காட்டுகிறது.
வேறுவழியின்றி போர்க்களங்களில் வேலை தேடும் ஹரியாணா இளைஞர்கள், நாளைய ஹரியாணா தேர்தலில் பாஜகவுக்கு பாடம் கற்பிப்பார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.
ஹரியாணா மாநிலத்தில் 90 உறுப்பினர்களைக் கொண்ட புதிய சட்டப்பேரவைக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க சனிக்கிழமை (அக். 5) ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் வியாழக்கிழமை (அக்.3) பிரசாரம் நிறைவடைந்தது. தோ்தலில் பதிவாகும் வாக்குகள், அக்டோபா் 8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மசோதாக்கள் மாறலாம்; வேறு எதுவும் மாறப் போவதில்லை: கார்கே

கார்கே பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!

மாணவர்களுக்குத் தேவை நீதிதான், ஒடுக்குமுறை அல்ல... கார்கே சரமாரி கேள்வி!

சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



