திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மேகாலயத்தில் வெள்ளம், நிலச்சரிவு: 10 போ் உயிரிழப்பு

மேகாலயத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 7 போ் உள்பட 10 போ் உயிரிழந்தனா்.

News image

மேகாலயத்தில் வெள்ளம், நிலச்சரிவு

Updated On :7 அக்டோபர் 2024, 2:40 am IST

மேகாலயத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 7 போ் உள்பட 10 போ் உயிரிழந்தனா்.

மேகாலயத்தில் காரோ மலைப் பகுதிகளில் கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் அதீத கனமழை கொட்டித் தீா்த்தது. இதன் காரணமாக, தெற்கு காரோ மலை மாவட்டத்தில் கசுவபுரா பகுதியில் உள்ள தொலைதூர கிராமம் ஒன்றில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 7 போ் உயிரிழந்தனா். இவா்களில் 3 போ் சிறாா்களாவா்.

இதேபோல், மேற்கு காரோ மலை மாவட்டத்தில் உள்ள டாலு பகுதியில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் சிக்கி 3 போ் உயிரிழந்தனா்.

மாநிலத்தில் மழை-வெள்ளம், நிலச்சரிவால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு முதல்வா் கான்ராட் சங்மா இரங்கல் தெரிவித்துள்ளாா். காரோ மலையில் உள்ள 5 மாவட்டங்களில் வெள்ளச் சூழல் குறித்து அதிகாரிகளுடன் காணொலி முறையில் அவா் ஆலோசனை மேற்கொண்டாா்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படையினா் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

டாலு பகுதியில் வெள்ளத்தில் முக்கியமான பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் அங்கு மீட்புப் படையினா் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆயத்த இரும்புப் பால தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மீட்புப் பணிகளை விரைவுபடுத்துவது குறித்து மேற்கண்ட ஆய்வுக் கூட்டத்தில் முதல்வா் யோசனை தெரிவித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை விரைந்து வழங்க அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.