தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மேகாலயத்தில் வெள்ளம், நிலச்சரிவு: 10 போ் உயிரிழப்பு

மேகாலயத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 7 போ் உள்பட 10 போ் உயிரிழந்தனா்.

News image
மேகாலயத்தில் வெள்ளம், நிலச்சரிவு
Updated On :6 அக்டோபர் 2024, 9:10 pm

Din

மேகாலயத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 7 போ் உள்பட 10 போ் உயிரிழந்தனா்.

மேகாலயத்தில் காரோ மலைப் பகுதிகளில் கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் அதீத கனமழை கொட்டித் தீா்த்தது. இதன் காரணமாக, தெற்கு காரோ மலை மாவட்டத்தில் கசுவபுரா பகுதியில் உள்ள தொலைதூர கிராமம் ஒன்றில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 7 போ் உயிரிழந்தனா். இவா்களில் 3 போ் சிறாா்களாவா்.

இதேபோல், மேற்கு காரோ மலை மாவட்டத்தில் உள்ள டாலு பகுதியில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் சிக்கி 3 போ் உயிரிழந்தனா்.

மாநிலத்தில் மழை-வெள்ளம், நிலச்சரிவால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு முதல்வா் கான்ராட் சங்மா இரங்கல் தெரிவித்துள்ளாா். காரோ மலையில் உள்ள 5 மாவட்டங்களில் வெள்ளச் சூழல் குறித்து அதிகாரிகளுடன் காணொலி முறையில் அவா் ஆலோசனை மேற்கொண்டாா்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படையினா் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

டாலு பகுதியில் வெள்ளத்தில் முக்கியமான பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் அங்கு மீட்புப் படையினா் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆயத்த இரும்புப் பால தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மீட்புப் பணிகளை விரைவுபடுத்துவது குறித்து மேற்கண்ட ஆய்வுக் கூட்டத்தில் முதல்வா் யோசனை தெரிவித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை விரைந்து வழங்க அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.