திமுக ஆதரவுடன் முதல்வராகப் போவதாக இபிஎஸ் கூறினார்! சி.வி. சண்முகம்தூய அரசியல் என்று சொல்லிவிட்டு அழுக்கு அரசியல் செய்கிறார் விஜய்! மு.க. ஸ்டாலின்முந்தைய அரசுகளின் திட்டங்கள் தொடரும்! பேரவையில் முதல்வர் விஜய் உறுதிநம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி! தவெக அரசுக்கு 144 பேர் ஆதரவு! நம்பிக்கை வாக்கெடுப்பு: திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு! குதிரை வேகத்தில் செயல்படும் அரசு; குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசு அல்ல! விஜய் பேச்சுபுஸ்பா பட பாணியில் சோபா ஆட்சி செய்யும் விஜய்! உதயநிதி கடும் விமர்சனம்! நம்பிக்கை வாக்கெடுப்பு! பேரவைக்கு வராமல் மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பு!நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக நடுநிலை! - எம்.எல்.ஏ. போஜராஜன்தவெகவில் குதிரை பேரம் நடந்தது; ஜோதிடருக்கு எதற்கு அரசுப் பதவி? பிரேமலதா
/

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து: உச்சநீதிமன்றத்தில் மனு

ஜம்மு-காஷ்மீருக்கு அடுத்த 2 மாதங்களுக்குள் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

News image
Updated On :8 அக்டோபர் 2024, 3:20 am IST

ஜம்மு-காஷ்மீருக்கு அடுத்த 2 மாதங்களுக்குள் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெறும் நிலையில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவின்கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு ரத்து செய்தது. இதைத் தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீா், லடாக் ஆகிய 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த ஸஹூா் அகமது பட், குா்ஷைத் அகமது மாலிக் ஆகிய 2 சமூக செயல்பாட்டாளா்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா்.

அந்த மனுவில், ‘ஜம்மு-காஷ்மீா் கடந்த 5 ஆண்டுகளாக யூனியன் பிரதேசமாக நீடிக்கிறது. பிராந்தியத்தின் வளா்ச்சிக்கு இது பல வகைகளில் தடையாக உள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு ஜம்மு-காஷ்மீருக்கு அடுத்த 2 மாதங்களுக்குள் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்’ எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.