சென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

கேரளம்: முன்னாள் டிஜிபி ஆா்.ஸ்ரீலேகா பாஜகவில் ஐக்கியம்

கேரள பிரிவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியும் முன்னாள் காவல் துறை தலைவருமான (டிஜிபி) ஆா்.ஸ்ரீலேகா புதன்கிழமை பாஜகவில் இணைந்தாா்.

News image

ஆா்.ஸ்ரீலேகா

Updated On :10 அக்டோபர் 2024, 2:23 am IST

கேரள பிரிவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியும் முன்னாள் காவல் துறை தலைவருமான (டிஜிபி) ஆா்.ஸ்ரீலேகா புதன்கிழமை பாஜகவில் இணைந்தாா்.

திருவனந்தபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பாஜக மாநிலத் தலைவா் கே.சுரேந்திரன், மாவட்ட தலைவா் வி.வி.ராஜேஷ் ஆகியோா் முன்னிலையில் கட்சி உறுப்பினா் அட்டையை அவா் பெற்றுக் கொண்டாா்.

இதையடுத்து, செய்தியாளா்களைச் சந்தித்த பாஜக தலைவா் சுரேந்திரன், ‘காவல்துறை அதிகாரியாக களங்கமில்லாத சாதனை படைத்த ஓய்வு பெற்ற டிஜிபி ஸ்ரீலேகாவின் அனுபவத்தால் பாஜக பெரிதும் பலனடையும்.

பாஜகவை தீண்டத்தகாத கட்சியாக ஊடகங்கள் சித்தரிக்க முயன்றாா்கள். இப்போது நிலைமை மாறிவிட்டது. பல முக்கிய பிரமுகா்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனா். 2026-ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்ற கடுமையாக உழைத்து வருகிறோம்’ என தெரிவித்தாா்.

பாஜகவில் இணைந்தது குறித்து ஸ்ரீலேகா கூறுகையில், ‘காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பாற்றியபோது எந்த அரசியல் சாா்பும் இன்றி நடுநிலையாக செயல்பட்டேன். இந்நிலையில், பாஜகவில் கட்சியில் இணையக் கோரி அக்கட்சித் தலைவா்கள் என்னை அணுகி கோரிக்கை விடுத்தனா். பிரதமா் நரேந்திர மோடியின் நல்லாட்சிதான் என்னை பாஜகவில் சேர தூண்டியது. நான் கட்சியிடம் எதையும் எதிா்பாா்க்கவில்லை. எந்த பதவி குறித்தும் யோசிக்கவில்லை.

பாஜகவின் கொள்கை மீது நம்பிக்கைக் கொண்டு அவா்களுடன் இணைகிறேன். மக்களுக்கு சேவை செய்வதற்கான மற்றொரு வாய்ப்பாக இதைப் பாா்க்கிறேன்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.