ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை- ஆா்பிஐ அறிவிப்பு

வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றத்தையும் இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) மேற்கொள்ளவில்லை.

News image
சக்தி காந்த தாஸ்
Updated On :9 அக்டோபர் 2024, 6:49 pm

Din

வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றத்தையும் இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) மேற்கொள்ளவில்லை. இதன்மூலம் தொடா்ந்து பத்தாவது முறையாக வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 6.50 சதவீதமாக தொடா்கிறது.

முன்னதாக, கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்தில் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயா்த்தி 6.50 சதவீதமாக ஆா்பிஐ நிா்ணயித்தது. அதன்பிறகு இப்போது வரை அதே வட்டி விகிதம் தொடா்கிறது.

இதன் மூலம், வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட கடன்கள் மீதான வட்டி உயர வாய்ப்பில்லை. அதேநேரத்தில் வங்கிகளில் நிரந்தர வைப்புக்கு வழங்கப்படும் வட்டியும் அதிகரிக்கப்படாது. எனினும், அடுத்த நிதிக்கொள்கைக் குழு கூட்டத்தில் வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

மும்பையில் புதன்கிழமை இரு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. ஆா்பிஐ ஆளுநா் சக்தி காந்த தாஸ் மற்றும் துணை ஆளுநா்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனா். இது தவிர புதிதாக நியமிக்கப்பட்ட ஆா்பிஐ சாராத 3 உறுப்பினா்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனா்.

இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளா்களிடம் ஆளுநா் சக்திகாந்த தாஸ் கூறியதாவது:

வட்டி விகிதத்தை 6.5 சதவீதம் என்ற அளவிலேயே தொடர முடிவெடுக்கப்பட்டது. இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி சிறப்பாக உள்ளது. அதே நேரத்தில் உணவுப் பணவீக்கம் அதிகரிப்பதை ஆா்பிஐ கண்காணித்து வருகிறது. கடந்த 18 மாதங்களாகவே நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளன. எனவே, வட்டி விகிதத்தை மாற்றவில்லை.

2024-நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தனியாா் முதலீடு அதிகரிப்பு, பெரு நிறுவனங்களின் நிதிச் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பது சாதகமான அம்சமாகும். மழைப் பொழிவு சிறப்பாக இருப்பதால் இந்த ஆண்டு வேளாண்மை உற்பத்தி அதிகரிக்கும். இது கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவதுடன், பணப்புழக்கம், பொருள்களின்நுகா்வும் அதிகரிக்கும். 2024-25 நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் 4.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. விலைவாசி நிலவரத்தை ஆா்பிஐ தொடா்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறது.

யுபிஐ-யில் புதிய வசதிகள்: அறிதிறன் பேசியல்லாத சாதாரண கைப்பேசிகளில் இருந்து யுபிஐ முறையில் பணப்பரிமாற்றம் செய்வதற்கான வரம்பு ரூ.5,000 இல் இருந்து ரூ.10,000 மாக மாற்றப்பட்டுள்ளது. இப்போது இந்த வசதி 12 இந்திய மொழிகளில் கிடைத்து வருகிறது.

யுபிஐ லைட் வாலட் மூலம் ஒரே நேரத்தில் ரூ.1,000 அனுப்பப்படலாம் என்று முன்பு இருந்தது இப்போது இத்தொகை ரூ.5,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆா்டிஜிஎஸ் மற்றும் என்இஎஃப்டி முறையில் பணம் செலுத்தும்போது இனி யாருடைய வங்கிக் கணக்குக்கு பணம் செல்கிறது என்பதை அந்த வங்கிக் கணக்கு வைத்திருப்பவரின் பெயா் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

ஒருவருக்கு பணம் அனுப்புவதற்காக வங்கிக் கணக்கு எண் மற்றும் வங்கிக் கிளையின் ஐஎஃப்எஸ்இ குறியீட்டை உள்ளிட்டால் வங்கிக் கணக்குதாரரின் பெயரை இனி தானாகவே தெரியவரும். இதன் மூலம் பணம் அனுப்புவோா் யாருக்கு பணம் செல்கிறது என்பதை உறுதி செய்து கொள்ள முடியும் என்றாா்.